வியாழன், 30 டிசம்பர், 2010

மக்கள் நலப்பணியாளராக வாய்ப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு

இராமநாதபுரம்: மக்கள் நலப்பணியாளர் காலி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக, மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் செம்பொன்குடி ஊராட்சியில் மக்கள் நலப்பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது.இதற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பம் செய்யலாம்.விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சியை சேர்ந்தவராகவும் அங்கு வசிப்பவராகவும் இருத்தல் வேண்டும். 18 முதல் 30 வயதுக்குட்பட்ட,10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வரும் ஜனவரி 6ம் தேதி மாலை 5.45 மணிக்குள் முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலக திட்டப்பிரிவில் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும், என தெரிவித்துள்ளார்.

நன்றி: தினகரன்-27.12.2010

வீரத் தாய்மார்கள்

டிசம்பர் மாதம் என்றாலே எதிரியின் அராஜகமும் இயற்கையின் சீற்றமும் தான் நமக்கு ஞாபகம் வருகிறது.

கடந்த டிசம்பர்-26 அன்று 'பிக்சிட்டி' என்று அழைக்கப்படும் பெரியபட்டிணத்தில் 15 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த ஒரு கோர சம்பவம் நிகழ்ந்தது. அல்லாஹ் இவர்கள் அனைவருக்கும் ஷஹீத் அந்தஸ்தை கொடுக்க வேண்டும்.

இந்த சம்பவத்தின் போது சில பெண்களின் வீரம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஹபீப் நிஸா(38) என்ற தாய் தன்னுடைய நான்கு குழந்தைகளையும் நீச்சலடித்து காப்பாற்றி விட்டு தான் மரணித்துவிட்டார்கள் என்பதை கேட்கும்போது நமக்கு உண்மையில் ஒரு வீர உணர்வு மேலெழும்புகிறது.

ஆண் மக்களே கடலில் இறங்க தயங்கும் நேரத்தில் ஒரு பெண் தனியாக தனது 4 குழந்தைகளையும் காப்பாற்றியது உண்மையில் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

அதேபோல் ஷர்மிளா(35) என்ற வீரமங்கை தன் 8 மாத கைக்குழந்தையை காப்பாற்றி தானும் தப்பிவந்த சம்பவம் முஸ்லிம் பெண்களின் வீரத்தை பரைசாற்றுகிறது.

இன்னும் சில பெண்கள் தங்கள் வீரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெரியபட்டிணம் என்றாலே வீரம் செறிந்த மண் என்பார்கள். அதை இவர்கள் நிரூபித்து இருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.

இச்சம்பவத்தினை நினைக்கும் போது நவம்பர்-25,2009 ல் சவூதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 14 பேரை காப்பாற்றி தன் உயிரைவிட்ட பாகிஸ்தானை சேர்ந்த வீரர் ஃபர்மான்(32) தான் நம் ஞாபகத்துக்கு வருகிறார்.

வீரம் என்பது அல்லாஹ் நமக்கு கொடுத்த சொத்து. அதை முறையாக நாம் பயன்படுத்தினால் அல்லாஹ் நமக்கு கண்ணியத்தையும், நல்வாழ்க்கையையும் பரிசாக கொடுப்பான்.
--ரியாஸ்.பெரியபட்டிணம்--
நன்றி : பாலைவனத் தூது

புதன், 29 டிசம்பர், 2010

ஆப்கானில் அசைக்கமுடியாத சக்தியாக மாறும் தாலிபான்கள் - ஐ.நா வரைபடம்

காபூல்,டிச.2:ஆப்கானிஸ்தானில் நாளுக்கு நாள் தலிபான்களின் கை ஓங்கி வருவதால், அங்கு பாதுகாப்புச் சூழல் மோசமடைந்து வருவதாகத் தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக ஐ.நா. இரு வரைபடங்களை தயாரித்து ரகசியமாக வைத்துள்ளது.

இந்த வரைபடங்கள் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புச் சூழல் மோசமடைந்து வருவதை தெளிவுபடுத்தியுள்ளன என்று 'வால் ஸ்ட்ரீட்' பத்திரிகை கூறியுள்ளது.

ஒரு வரைபடம் இந்த ஆண்டின் துவக்கத்தில் அங்கு நிலவிய பாதுகாப்பை பற்றியது. மற்றொரு வரைபடம் இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் அங்கு நிலவியப் பாதுகாப்பு குறித்தது.

இதில் முதல் வரைபடம், ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் தலிபான்கள் கை தொடர்ந்து ஓங்கி வருவதையே காட்டுகிறது. ஆனால் வட, கிழக்குப் பகுதிகளில் 16 மாவட்டங்கள் நேட்டோ பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இருப்பதை உறுதி செய்கிறது.

ஆனால் அக்டோபர் மாத வரைபடத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. தென்பகுதியில் 90 சதவீதம் தலிபான்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஓரளவுக்கு நேட்டோ படைகளின் ஆதிக்கத்தில் இருந்து வந்த வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள 16 மாவட்டங்களையும் தலிபான்கள் தங்கள் வசம் கொண்டுவர தீவிர முயற்சி மேற்கொண்டு, அதில் அவர்கள் முன்னேற்றம் கண்டுவருவதும் தெளிவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான நேட்டோ படையின் நடவடிக்கைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்று அமெரிக்கா கூறிவருகிறது.

2014-ல் அந்நாட்டை காக்க வேண்டிய பணியை அந்நாட்டு பாதுகாப்புப் படையிடம் முழுமையாக ஒப்படைத்துவிட்டு நேட்டோ படை வாபஸ் பெறப்படும் என்றும் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துவிட்டார்.

ஆனால் இதுபோன்ற நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அசைக்க முடியாத சக்திகளாக உள்ளனர். அவர்கள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றனர் என்பதை ஐ.நா. வரைபடங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதனால் ஆப்கானிஸ்தானின் உண்மையான பாதுகாப்பு நிலவரம்தான் என்ன என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

அமெரிக்கா சொல்வதுபோல் தலிபான்கள் உண்மையிலேயே ஒடுக்கப்பட்டுள்ளனரா, இல்லை ஐ.நா. வரைபடம் சுட்டிக்காட்டியுள்ளது போல் அவர்கள் தொடர்ந்து அசைக்க முடியாத சக்திகளாக உள்ளனரா என்ற வினாவும் எழுந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 9 ஆண்டுகளாகத் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கையை அமெரிக்கா தலைமையிலான அந்நிய ஆக்கிரமிப்பு படை முடுக்கிவிட்டுள்ளது. அங்கு சுமார் 1,40,000 வீரர்கள் தலிபான்களுக்கு எதிரான அதிரடி வேட்டையின் பெயரால் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
செய்தி: பாலைவனத் தூது

ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது

டெஹ்ரான்,டிச.29:இஸ்ரேல் உளவு நிறுவனமான மொசாதிற்காக பணியாற்றிய இளைஞர் ஒருவருக்கு ஈரான் மரணத் தண்டனையை நிறைவேற்றியது.

டெஹ்ரானில் எவின் சிறையில்வைத்து அலி அக்பர் ஸியாதத் என்ற மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல வருடங்களாக மொசாதிற்காக பணிபுரிந்த ஸியாதத் முக்கிய விபரங்களை மொசாதிற்கு அளித்துள்ளார். ஈரானை விட்டு வெளியேற முயன்றபொழுது கடந்த 2008 ஆம் ஆண்டு கைதுச் செய்யப்பட்டார் ஸியாதத்.

ஈரானின் ராணுவ ரகசியங்களைக் குறித்த செய்திகளை இவர் மொசாதிற்கு அளித்ததை விசாரணையின் போது ஒப்புக்கொண்டார் என இர்னா செய்தி நிறுவனம் கூறுகிறது.

இதற்கு கூலியாக மொசாதிடமிருந்து ஸியாதத்திற்கு 60 ஆயிரம் டாலர் பணம் கிடைத்தது என இவர் புலனாய்வு அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.

ராணுவ மையங்கள், போர் விமானங்கள், பயிற்சி விமானங்கள், ஏவுகணைகள் ஆகியன தொடர்பான விபரங்களை இவர் இஸ்ரேலுக்கு அளித்துள்ளார். ராணுவ ரகசியங்கள் இவருக்கு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து இர்னா தெரிவிக்கவில்லை.

துருக்கி, தாய்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வைத்து இவர் மொசாத் ஏஜண்டுகளுடன் சந்திப்பை நடத்தியுள்ளார். தேசத்தை காட்டிக்கொடுப்பது ஈரானின் சட்டப்படி மரணத் தண்டனை விதிக்கும் குற்றமாகும்.

மொசாதிற்காக பணியாற்றிய டெலிகாம் பொறியாளர் அலி அஷ்தரிக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு ஈரான் மரணத்தண்டனை விதித்திருந்தது.

ஈரான் பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்திய பீப்பிள்ஸ் முஜாஹிதீன் ஆர்கனைசேசன் ஆஃப் ஈரான்(பி.எம்.ஒ.ஐ) உறுப்பினர் அலி ஸரேமிக்கும் நேற்று மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,பாலைவனத் தூது

ஈரான் அணுசக்தி நாடு - அஹ்மத் நஜாத் பிரகடனம்

டெஹ்ரான்,டிச.29:ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளை தாண்டி அந்நாடு அணுசக்தி நாடாக மாறியுள்ளது என ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் பிரகடனப்படுத்தியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் நிர்பந்தத்தாலும், பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டும் ஈரானுக்கெதிராக ஐ.நா தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், அவர்கள் அனைவரின் முயற்சிகளையெல்லாம் தோற்கடித்து ஈரான் அணு சக்தி நாடாக மாறியுள்ளது என கரஜில் தெற்கு நகரத்தில் கூடியிருந்த மக்களிடையே அஹ்மத் நஜாத் பிரகடனப்படுத்தினார்.

உலக வல்லரசுகளுக்கு இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று, இஸ்லாமிய நாடான ஈரானுக்கெதிராக தீர்மானங்களை நிறைவேற்றும் அவர்களின் பழைய வழி. இரண்டாவது ஈரானுடன் ஒத்துழைப்பது. முதல் வழி சரியல்ல என்பது முன்னரே தெளிவாகிவிட்டது என நஜாத் தெரிவித்தார்.

ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு தீர்வு காண்பதற்கு ஒரே வழி மோதல் அல்ல மாறாக ஒத்துழைத்து செயலாற்றுவதாகும். ஈரானின் உரிமைகளை புரிந்துக்கொண்டு அதனுடன் மேற்கத்திய சக்திகள் இணைந்து செயல்பட்டேயாக வேண்டும். உரிமைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இணைந்து செயல்பட ஈரான் தயார். உரிமைகளை பெறுவதில் ஈரானை தடுப்பவர்கள் அதன் பலனை அனுபவிக்க வேண்டிவரும் என மேற்கத்திய நாடுகளுக்கு நஜாத் எச்சரிக்கை விடுத்தார்.

ஈரானுக்கெதிராக ஐ.நா நிறைவேற்றிய தீர்மானம் சட்டவிரோதம் என கூறிய நஜாத் ஈரான் முன்னேறிச் செல்லும் வேகத்தை அதிகரிக்கவே இத்தீர்மானம் உதவும் என தெரிவித்தார்.

ஈரானின் முதல் அணுசக்தி நிலையமான புஷ்ஹர் வருகிற ஜனவரி மாத இறுதியில் செயல்பட துவங்குமென ஈரான் அணுசக்தித்துறை தலைவர் அலி அக்பர் ஸலேஹி நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். இதற்கு பின்னர் அஹ்மத் நஜாத் ஈரானை அணுசக்தி நாடாக பிரகடனப்படுத்தியுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,பாலைவனத்தூது

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

அஜ்மீர் குண்டுவெடிப்பு:முக்கிய துப்பு கிடைத்தது - பயன்படுத்தப்பட்ட கார் சிக்கியது


ஜெய்ப்பூர்,டிச.26:அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட காரை ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் சில முக்கிய துப்பு கிடைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2007-ம் ஆண்டு ஆஜ்மீர் தர்கா வளாகத்தில் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் இந்து தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக ஒரு சாமியார் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது முக்கியத் துப்பு கிடைத்துள்ளதாக ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்புச் சம்பவத்தின்போது வெடிகுண்டுகளை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஐவரின் பெயர் விவரங்களும் கிடைத்துள்ளன. இது முக்கியத் திருப்பமாக கருதப்படுகிறது.

கருப்பு நிற சான்ட்ரோ காரைத்தான் இந்த தீவிரவாத செயலுக்கு குற்றவாளிகள் பயன்படுத்தியுள்ளனர். இந்த கார் மத்தியப் பிரதேசத்தில் வைத்து சிக்கியுள்ளது. இந்தக் காரில் வெடிகுண்டுகளை வைத்துக் கொண்டு ம.பி. மாநிலம் இந்தூரிலிருந்து குஜராத் மாநிலம் கோத்ராவுக்குப் போயுள்ளனர்.

கோத்ராவிலிருந்து அஜ்மீருக்கு பஸ்ஸில் வைத்துக் கொண்டு சென்றுள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே அஜ்மீர் சம்பவம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் என்பவரை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
செய்தி: தட்ஸ் தமிழ்,பாலைவனத்தூது

கீழக்கரை அருகே கடலில் படகு மூழ்கியதில் 16 பேர் பரிதாப பலி


கீழ்க்கரே அருகே உள்ளது பெரியபட்டணம். இங்குள்ள மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு வசிக்கும் அனைவருமே முஸ்லீம் சமுதாயத்தினர் ஆவர்.

தற்போது விடுமுறைக்காக வெளிநாடுகளிலிருந்து ஊர் திரும்பியிருந்தனர். இந்த நிலையில், சீனி உருது என்பவரது குடும்பத்தினரும், ஆஸ்திரேலியாவில் இருந்து கடந்த வாரம் வந்திருந்த அவரது உறவினர்களும் சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.

இன்று காலை அவர்கள் 2 மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளில் பெரிய பட்டிணத்திலிருந்து 7 கடல் மைல் தூரத்தில் உள்ள அப்பா தீவு மற்றும் முள்ளித் தீவுக்குப் புறப்பட்டனர். ஒரு படகில் ஆண்கள் 20 பேரும் மற்றொரு படகில் குழந்தைகள் உள்பட பெண்கள் 20 பேரும் சென்று கொண்டிருந்தனர்.

தீவுக்கு சற்று தொலைவில் ஆண்கள் பயணித்த படகு சென்றபோது பின்னால் பெண்கள் வந்த படகை காணவில்லை. அந்த படகை தேடியபோது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பெரியபட்டிணத்தில் உள்ள தங்களது உறவினர்கள் மற்றும் மீனவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சுமார் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் புறப்பட்டனர். தீவை ஒட்டியுள்ள 4 பகுதிகளுக்கும் தனித்தனியாக பிரிந்து சென்ற அவர்கள் மாயமான படகை தேடினர்.

இந்த தகவல் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஹரிகரனுக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனே கடலோர காவல்படையினர் மற்றும் கடற்படை வீரர்கள் தேடும் பணியை தீவிரப்படுத்தினர். மாயமான படகை தேடும் பணியில் ஹெலி காப்டரும், அதிநவீன ஹோவர்கிராப்ட் படகும் ஈடுபடுத்தப்பட்டது.

இதற்கிடையே மாயமான படகு பலத்த காற்று காரணமாக நடுக்கடலில் மூழ்கியது. அந்த பகுதிக்கு கடற்படையினர் விரைந்தனர். கடலில் மூழ்கி பிணமாக மிதந்த பரக்கத் (36), ஹபீப்நிஷா (38) உள்பட 16 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. கடலில் மிதந்தபடி போராடிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் உள்பட 11 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மீட்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 20 பேர் வரை இறந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் தெரிவிக்கிறது.

கடலில் படகு மூழ்கிய தகவல் கிடைத்ததும் பெரிய பட்டிணத்தை சேர்ந்தவர்கள் கடற்கரைக்கு திரண்டு வந்தனர். உரிய அனுமதி இல்லாமல் இவ்வாறு சுற்றுலாப் பயணிகளை சட்டவிரோதமாக யார் கடலுக்குள் அழைத்துச் சென்றது என்பது குறித்து விசாரித்து வருவதாக கடலோரக் காவல் படையின் டிஎஸ்பி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் பெரியபட்டணம் பகுதி பெரும் சோகமயமாக காணப்படுகிறது.

வலுவான இஸ்லாமிய ஊடகம் தேவை - ஒ.ஐ.சி பொதுச்செயலாளர்

ஜித்தா,டிச.26:இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறு பிரச்சாரங்களை எதிர்கொள்ள வலுவான ஊடகம் தேவை இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் (organisation of islamic countries) பொதுச் செயலாளர் பேராசிரியர் இக்மலுத்தீன் இஹ்ஸானோக்லு தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிக் ப்ரோட்காஸ்டிங் யூனியனின்(ஐ.பி.யு) பொது அவைக் கூட்டத்தில் உரையாற்றினார் இக்மலுத்தீன்.

ஊடக உலகின் வேகமான வளர்ச்சிக்கொப்ப செயல்படுவதற்கு இஸ்லாமிய ஊடகங்கள் வீழ்ச்சியடைந்துவிட்டன. 2005 ஆம் ஆண்டு சவூதி மன்னர் அப்துல்லாஹ்வின் முயற்சியில் மக்காவில் நடந்த ஒ.ஐ.சி மாநாட்டில் ஐ.பி.யு போன்ற ஒ.ஐ.சி ஊடகங்களையும், சர்வதேச இஸ்லாமிய செய்தி ஏஜன்சியையும்(ஐ.ஐ.என்.எ) வலுப்படுத்த அழைப்பு விடுத்திருந்தது என இக்மாலுத்தீன் தெரிவித்தார்.

சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளையும், விருப்பங்களையும் எதார்த்தமாக்கும் விதத்தில் ஐ.பி.யு வை வலுப்படுத்த வேண்டுமென சவூதி அரேபியாவின் கலாச்சார செய்தி தொடர்பு துறை அமைச்சர் அப்துல் அஸீஸ் கோஜா தெரிவித்தார்.

உலக தரம் வாய்ந்த ரேடியோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிக்க அவர் ஒ.ஐ.சி நாடுகளின் உதவியை கோரினார். ஒ.ஐ.சியின் தலைமையகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் ஐ.பி.யுவின் புதிய பொதுச் செயலாளராக மலேசியாவின் ஸைனுல் ஆப்தீன் இப்ராஹீம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ், பாலைவனத்தூது

வியாழன், 23 டிசம்பர், 2010

ஹிந்துத்துவமும், சியோனிஷமும் - ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மாநாட்டில் உரை நிகழ்த்திய திக்விஜய்சிங் இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் நடத்திவரும் இன அழித்தொழிப்புகள் ஜெர்மன் நாசிப் படையினரின் யூத இன அழித்தொழிப்பிற்கு சமம் என தெரிவித்தது இஸ்ரேலுக்கு அவமானமாகிவிட்டது போலும்.

இரண்டாம் உலகப் போரில் ஆரிய இன சுத்திகரிப்பில் நம்பிக்கைக் கொண்ட நாசிகள் நடத்திய யூத இன அழித்தொழிப்பையும் குஜராத்திலும் இந்தியாவின் பல பாகங்களிலும் ஹிந்துத்துவா சக்திகள் நடத்திவரும் முஸ்லிம் இனப்படுகொலைகளையும் ஒப்பிடமுடியாது என இஸ்ரேல் தூதரகம் கோபத்தோடு பதிலளித்துள்ளது.

ஆனால், இத்தாலி மற்றும் ஜெர்மனிக்கு சென்று நாசிச-பாசிச தத்துவம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதனைக் குறித்து ஆய்வுச்செய்து அதனை இந்தியாவில் செயல்படுத்த துணிவுடன் களமிறங்கியது ஆர்.எஸ்.எஸ் ஸ்தாபகரின் நூல்களில் காணக்கிடைப்பது இஸ்ரேலிய தூதரகத்தின் திறமைசாலிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது நம்ப முடியாததாகும்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது தலைவரான எம்.எஸ்.கோல்வால்கர் எழுதிய 'நாம் அல்லது நமது தேசம் வரையறுக்கப்பட்டது (We or Our Nation Defined)' என்ற நூலின் துவக்கமே நாசி இயக்கத்தினரை புகழ்த்தியவாறே அமைந்துள்ளது.

இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கிய சியோனிச தத்துவம் யூதர் அல்லாத இனத்தவர்களை இரண்டாந்தர குடிமக்களாக மட்டுமல்ல, தங்களது ஆக்கிரமிப்பிற்கும் அட்டூழியத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை கூட்டாக படுகொலைச் செய்வதை தேசிய கொள்கையாகவும் மாற்றியது.

ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிபுரிந்த வேளையில் சியோனிஷ தலைவர்கள் நாசி ஆட்சியாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணினர் என்பது நம்பமுடியாத ஒன்றாக இருந்தபோதிலும் யூத வரலாற்றாசிரியர்களே ஆதாரத்துடன் இதனை நிரூபித்துள்ளனர்.

இந்தியாவில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் குஜராத்தில் ஆயிரக்கணக்கான மக்களை கொடூரமாக இனப்படுகொலையை நடத்தியது அவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரேக் காரணத்தினால்தான் என்பதுக் குறித்து இஸ்ரேலிய தூதரக அதிகாரிகளுக்கு  மட்டுமே சந்தேகம் ஏற்படும்.

அபினவ் பாரத், ஜெய் வந்தேமாதரம் போன்ற ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாதுடன் தொடர்பு வைத்திருப்பதற்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது சியோனிஷ-ஹிந்துத்துவா உறவு வலுப்பெற்றதற்கும் காரணம் இனப்பகையும், இன அழித்தொழிப்புமாகும்.

அபினவ் பாரத்தின் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் இந்தியாவில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த கூடிய ரகசிய கூட்டங்களிலெல்லாம் இஸ்ரேலின் உதவியைக் குறித்து தொடர்ந்து பேசிய தகவல்கள் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கை ஹேமந்த் கர்காரே விசாரிக்கும் போது வெளிவந்தன.

நாசிகள் தங்களது இன அழித்தொழிப்பு வேட்டையை நடத்திய காலக்கட்டத்தில் யூதர்களை மட்டுமல்ல போலந்து நாட்டவர்களையும், ஜிப்ஸிகளையும் சிறையிலடைத்து கொலைச் செய்துள்ளனர். ஆனால், இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு யூதர்களை மட்டுமே ஹிட்லர் தலைமையிலான நாசிக்கள் இனப்படுகொலைச் செய்தார் என்ற பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டிருப்பது 'யூத படுகொலை' என்ற பிராண்டை பயன்படுத்தி ஃபலஸ்தீனர்களை இன அழித்தொழிப்பு செய்வதற்கான சியோனிஷத்தின் கொடூரமான கொள்கையாகும்.

ஆனால், அந்த பருப்பு இங்கு வேகாது. ஏனெனில் இனப்பகை, இன அழித்தொழிப்பு ஆகியவற்றில் ஹிந்துத்துவா சக்திகளும், சியோன்ஷ்டுகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது இந்தியர்களுக்கு தெரியும்.
செய்தி: விமர்சகன்,பாலைவனத்தூது

அஜ்மீர் குண்டுவெடிப்பு:அஸிமானந்தாவை ஆஜர்படுத்த வாரண்ட்

அஜ்மீர்,டிச.23:அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுவாமி அஸிமானந்தாவை ஆஜர்படுத்த நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
ஏ.டி.எஸ் கூடுதல் சூப்பிரண்ட் சத்தியேந்திரசிங் ராணவத்தின் மனுவில் ஆஜர்படுத்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அஜ்மீர்
குண்டுவெடிப்பிலும் அஸிமானந்தாவுக்கு பங்குள்ளது என ராணவத்
நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

59 வயதான ஹிந்துத்துவா பயங்கரவாதி அஸிமானந்தாவை ஜனவரி 4-ஆம் தேதி ஏ.டி.எஸ் நீதிமன்றம் முன்பாக ஆஜர்படுத்துவார்கள். மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கடந்த நவம்பர் 19-ஆம் தேதி ஹரித்துவாரில் சி.பி.ஐயால் கைதுச் செய்யப்பட்ட இவர் தற்பொழுது ஹைதரபாத் சிறையில் உள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ், பாலைவனத்தூது

பள்ளிக்கூட மாணவிகளை கூட்டாக வன்புணர்வுச் செய்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்

கொல்கத்தா,டிச.23:சாதாரணமான ஒரு பிரச்சனையை காரணமாக வைத்து ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத கும்பல் பள்ளிக்கூட மாணவிகளை கூட்டாக வன்புணர்வுச் செய்துள்ளனர்.

கொல்கத்தாவிற்கு அடுத்துள்ள பீவிஹகோலா ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 12 மாணவிகள் ஆர்.எஸ்.எஸ் வெறிக் கும்பலின் பாலியல் பலாத்காரத்திற்கு பலியாகியுள்ளனர்.
கடந்த நவம்பர் 9 ஆம் தேதி இச்சம்பவம் நடந்தபொழுதிலும் ஊடகங்கள் இச்செய்தியை மூடி மறைத்துள்ளன. காளி பூஜைக்காக பள்ளிக்கூட சுற்றுப்புற பகுதியை அலங்காரம் செய்ததுத் தொடர்பாக இச்சம்பவத்தின் துவக்கம் அமைந்துள்ளது.

பூஜை கொண்டாட்டங்கள் முடிந்து பள்ளிக்கூடம் திறந்த பொழுதிலும் பள்ளிக்கூட காம்பவுண்டில் கட்டிய பந்தல் மாற்றப்படவில்லை. மேலும் பள்ளிக்கூட கேட்டில் மூங்கிலால் கட்டப்பட்ட வேலி மாணவ மாணவிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பள்ளிக்கூட நிர்வாகிகள் பாஞ்ச்லா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த 4 பேரைக் கொண்ட போலீஸ் குழு மூங்கில்களை மாற்றுவதற்கு ஆசிரியர்களிடம் கூறினர். ஆனால், அவர்கள் அதற்கு தயாராகவில்லை. பின்னர் அவ்விடத்தில் நின்றுக் கொண்டிருந்த மாணவிகளின் உதவியுடன் மூங்கில்கள் மாற்றப்பட்டன. ஆனால், நாங்கள் கட்டிய மூங்கில்களை மாற்றிவிட்டார்கள் எனக் குற்றஞ்சாட்டி ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் அங்கு வந்து சம்பவ இடத்திலிருந்த ஆசிரியர்களையும், மாணவிகளையும் தாக்க ஆரம்பித்தனர். பின்னர் 12 மாணவிகளை பள்ளிக்கூட குளத்தின் அருகிலுள்ள கட்டிடத்திற்கு தூக்கிச்சென்று பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளது இந்த பயங்கரவாத காம வெறிப்பிடித்த கும்பல்.

இதில் ஷப்னம் ஹாத்தூன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவியை ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத காமவெறி இயக்கத்தைச் சார்ந்த தகப்பனும், மகனும் உட்பட 8 பேர் சேர்ந்து வன்புணர்வு கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். இதனை பாதுகாவலர்கள் போலீசாரிடம் புகாராக அளித்துள்ளனர்.

ராஜ்குமார், அவனுடைய மகன் சுஜித் கொல்லா, பினோய் மண்ணா, பொய்கோந்தா ஆகியோரின் தலைமையில்தான் இந்த பயங்கரத்தை
நடத்தியுள்ளது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.

இந்தக் கொடூரத்தை தடுக்கவந்த பள்ளி தலைமை ஆசிரியரை ஆர்.எஸ்.எஸ் கும்பல் தாக்கியுள்ளனர். கடுமையாக காயமுற்ற இவர் தற்பொழுதும் ஹவ்ரா பொது மருத்துவமனையில் சிகிட்சைப் பெற்று வருகிறார்.

பாலியல் வன்புணர்வுக்கு இரையான மாணவிகள் பலரும் தற்பொழுது மனோநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்களுடைய பாதுகாவலர்கள் தெரிவிக்கின்றனர்.

துவக்கத்தில் வழக்கை பதிவுச்செய்ய தயங்கிய போலீசார் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் எதிர்ப்பை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத காம வெறிக்கும்பல் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவுச் செய்தனர்.

ஜாமீன் பெற இயலாத குற்றம் என்ற பொழுதிலும் ஆர்.எஸ்.எஸ் வெறியர்கள் ஜாமீன் கிடைக்க தடையில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவிகளுக்கு நடந்த இந்த கொடூரத்தைக் குறித்து தேசிய ஊடகங்கள் மெளனம் சாதிக்கின்றன. பல நாட்களுக்கு பிறகு 'கலம்' என்ற வங்காள பத்திரிகைதான் இச்செய்தியை முதலில் வெளிக்கொணர்ந்தது.

தொலைக்காட்சி சேனல்களையும், நாளிதழ்களையும் நேரில் அழைத்து இச்சம்பவம் குறித்து அறிவித்த பொழுதிலும் அவர்கள் இதனை செய்தியாக வெளியிட மறுத்துள்ளனர். இத்தகவலை 'வாரிகா' என்ற பத்திரிகையின் எடிட்டர் அஹ்மத் ஹஸன் தெரிவிக்கிறார்.

இச்சம்பவத்தின் பின்னணியில் மதவெறிதான் காரணமென பலரும் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தைக் குறித்து முழுமையான விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் நிறுத்துவதற்கு மகளிர் உரிமை கமிஷன் தலைவி மாலினி பட்டாச்சார்யா உள்ளிட்டவர்கள் களமிறங்கியுள்ளனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ், பாலைவனத்தூது

புதன், 22 டிசம்பர், 2010

வேலைவாய்ப்பு வலைதளங்கள்

JOBS IN MIDDLE EAST, INDIA....

http://positionsvacant.wordpress.com/
http://www.hirerightt.com/jobs.asp
http://www.uaedubaijobs.com/
RECRUITMENT AGENCIES IN DUBAI
http://www.dubaijobs.net/
http://www.bayt.com/
http://www.uaestaffing.com/
http://www.nadia-me.com/
http://www.jobsindubai.com/
http://www.naukrigulf.com/
http://www.itjobsgulf.com/
http://www.gulftalent.com/
http://www.mybetterfuture.com/
http://http//jobs.theemiratesnetwork.com
http://ae.timesjobs.com/
http://aljazeerajobs.com/jobs/jobs-in-dubai-uae.html
http://www.allarabia.com/
http://uae.monstergulf.com/
http://www.recruitgulf.com/
http://www.apnijobs.com/
http://www.jobs-me.com/
http://jobs.efinancialcareers.com/Accounting_Finance/UAE.htm
http://www.fsi.jobs/
http://www.jobs123.com/
http://www.arabianbusiness.com/jobs
http://www.gulfconstructionjobs.com/
http://www.ixpats.com/jobs/
http://www.careerjet.ae/
http://www.recruitgulf.com/Jobs-in-UAE.asp
http://www.emiratesvillage.com/
http://dubai-bb.com/dubai-classifieds-40.html
http://www.balajob.com/index.php
http://www.charterhouseme.ae/
http://www.gnads4u.com/jobs
http://www.retailjobsdubai.com/
http://uae.monstergulf.com/it-jobs-uae.html
http://www.dubaijobsnetwork.com/
http://www.syriajobs.net/
http://www.workindubaiuae.com/
http://www.guide2dubai.com/jobs/
http://aljazeerajobs.com/
http://www.riskcareers.com/jobs/jobs-in-UAE
http://www.jobs4medical.co.uk/medical-jobs-in-uae.php
http://www.gulftalent.com/home/index.php
http://gulfjobseeker.com/
http://www.jobs-in-gulf-uae-bahrain-qatar-oman-dubai.linksseo.com/
http://www.bestdubaijobs.com/
http://www.gulfjobsbank.com/
http://www.jobsouk.com/
http://www.jobsup.com/
http://www.careermidway.com/
http://www.allabudhabijobs.com/
http://www.gulfresumeblaster.com/
http://www.wizeefa.com/
http://www.kareerbuddy.com/public/index.php
http://www.fsi.jobs/advantages.asp
http://www.apnijobs.com/jobs/uae
http://jobs.efinancialcareers.ie/UAE.htm
http://www.emirates-ads.ae/jobs.aspx
http://www.naukrihub.com/overseas-jobs/gulf/uae/
http://www.hoteliercareer.com/
http://www.naukridubai.com/
http://www.precisiondubai.com/
http://www.alluaejobs.com/

செய்தி: நாச்சியார் கோயில் முஸ்லிம் ஜமாஅத் 

செவ்வாய், 21 டிசம்பர், 2010

யூதர்களுக்கு எதிரான நாஜிக்களைப் போன்றவை ஆர்.எஸ்.எஸும், பாஜகவும்-திக்விஜய் சிங்

டெல்லி: யூதர்களுக்கு எதிராக நாஜிக்கள் எப்படி செயல்பட்டனரோ, அதேபோல முஸ்லீம்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும், பாஜகவும் துவேஷத்துடன் செயல்படுகின்றன என்று மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

கர்கரே மும்பை தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்படுவதற்கு முன்பு தனக்குப் போன் செய்து, இந்து தீவிரவாதிகளால் தனக்கு ஆபத்து இருப்பதாக பொய்யான தகவலை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் திக்விஜய் சிங் என்பது நினைவிருக்கலாம்.

நேற்று நடந்த டெல்லி காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு திக்விஜய் சிங் பேசுகையில், நாஜிக்கள் எப்படி யூதர்களுக்கு எதிராக துவேஷத்துடன் செயல்பட்டனரோ அதேபோலத்தான் இப்போது ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை செயல்படுகின்றன.

இந்தியாவில் தீவிரவாதத்தின் வேர் பதியப்பட்டது 1992ல் அத்வானி நடத்திய ரத யாத்திரையின்போதுதான்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை குற்றம் சாட்டி வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, தனது ஆட்சியில்தான் ரேடியோ அலை ஒதுக்கீட்டில் பெரும் ஊழலை செய்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்போது தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜன் தலைமையிலான துறைதான் இந்த ஊழலில் ஈடுபட்டது.

மேலும், மகாஜன் காலத்தில்தான் முதலில் வருவோருக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை என்ற நடைமுறையும் கொண்டு வரப்பட்டது. அதுவரை இருந்து வந்த ஏல முறையை நீக்கியவர் மகாஜன்தான்.

உ.பியில் முதல்வராக இருந்த இருவர் பெருமளவில் சொத்துக்களைக் குவித்துள்ளனர். இதுகுறித்து விரைவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட வேண்டும். (அவர்களது பெயரை திக்விஜய் சிங் குறிப்படிவில்லை. இருப்பினும் அவர் கூறியது மாயாவதி மற்றும் முலாயம் சிங் யாதவ் என்று கருதப்படுகிறது)

1930களில் ஹிட்லரின் நாஜிக் கட்சி யூதர்களை வெறித்தனமாக தாக்கியது. அதேபோல ஆர்எஸ்எஸின் கொள்கையும், முஸ்லீம்களைக் குறி வைத்தே உள்ளது. தேசியவாதம் என்ற பெயரில் முஸ்லீ்ம்களை அழிக்க ஆர்எஸ்எஸ் துடிக்கிறது.

இந்தியாவில் தீவிரவாதத்தின் விதையை விதைத்தவர் அத்வானிதான். அவர் 1992ல் நடத்திய ரத யாத்திரைதான் தீவிரவாதத்தின் வேராகும்.

இந்திய வரலாற்றில் மிகப் பெரிய கரும்புள்ளியாக அமைந்துள்ளது பாபர் மசூதி இடிப்பு சம்பவம்.

அனைத்து முஸ்லீம்களும் தீவிரவாதிகள் இல்லை ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லீம்கள் என்கிறார் அத்வானி. அவர் கூறுவது போலவே, அனைத்து இந்துக்களும் தீவிரவாதிகள் இல்லை, ஆனால் அனைத்து இந்துத் தீவிரவாதிகளும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் என்று நாம் சொல்லலாமா.

சிசு மந்திர் பள்ளிகளில் குழந்தைகளிடம் முஸ்லீம் துவேஷத்தை விதைத்து வருகிறது ஆர்எஸ்எஸ். இது நாட்டுக்குப் பெரும் அபாயமாக உருவெடுத்துள்ளது.



செய்தி : தட்ஸ் தமிழ் -20.10.10

Leading Group Company in Qatar for their MEP Projects (Free Recruitment)

DEQ – Qatar, Leading and ISO Certified Company in Qatar involved in MEP Projects and Facilities Management expert in 1950. 

About us : AGP International Services, Chennai, Mumbai a Govt. of India recognized company, with two decades of experience. To know more about us visit www.agpindia.com
 

 
SALIENT FEATURES OF THIS ASSIGNMENT

JOB LOCATION                               :  QATAR

PROJECT                                         :  MEP PROJECTS (Construction)

CANDIDATE’S PROFILE                   : DETAILS DESCRIPTION GIVEN BELOW

SALARY                                            : BEST IN THE INDUSTRY

BENEFITS                                        : VERY BEST IN THE MARKET

FINAL INTERVIEW                            : SHORTLY AT MAJOR LOCATIONS / TELEPHONIC

 Proceed to zoom your updated resume in word format to operation5@agpindia.com to build an exciting career in the globe.

Contact us for further information and guidance.

Assuring you always best of our services and looking forward to receive your valuable resume. Also we will be highly thankful if you refer your friends or known circle, as per our requirements given below.

Vacancies in Large Numbers.


#
Position
Exp
Required Field of Expertise
1
Construction Managers
12+
MEP (Elec., HVAC, Plumbing, & Fire Fighting) building experience in large scale projects with ability to manage all aspects of construction execution in accordance with the contract. Direct all field operations to meet project and company contractual obligations at all times while maintaining high project team morale. Excellent English verbal and written communication skills.
2
Q/A Managers
10+
MEP experience in large scale projects with good communication skills in English.
3
CAD Managers
10+
MEP CAD experience with managerial skills.
4
Store Managers
8+
Can provide effective and efficient stock inventory management services and stores administration. Capable of guiding the procurement team on acquiring goods & services. MEP materials knowledge is a must.
5
Sr. Electrical Engineers
8+
Engineering Degree holder with Electrical site experience in large scale projects. Able to plan, monitor and coordinate work activities. Familiar with the power  requirements of the National electrical code.
6
Sr. Electrical Commissioning Engineers
8+
Electrical Engineering degree holder with Electrical experience in large scale projects having good communication skills in English.
7
Sr. Mechanical Commissioning Engineers
8+
Mechanical Engineering degree holder with HVAC, Plumbing & Fire Fighting experience in large scale projects having good communication skills in English.
8
Sr. Planning Engineers
10+
Engineering Degree Holder with experience in planning, scheduling, monitoring of on going project and execution of Projects and ensuring submission of required reports in timely manner. Have acquired knowledge in various types of scheduling technique and software like Primavera. Have good communication skills in English.
9
Sr. Plumbing Engineers
10+
Mechanical Engineering degree holder, experience in Plumbing & Fire Fighting systems. Good knowledge in international standards. Experience in large scale projects.
10
Electrical Design Engineers
10+
Degree in Electrical Engineering with 10+ years exp in MEP Projects, good exposure in designing
11
Quantity Surveyors - Electrical
5+
Experience in Electrical material take off and capable of quantifying  materials from drawings. Good communication skills in English.
12
Quantity Surveyors - Mechanical
5+
Experience in Mechanical material take off and capable of quantifying  materials from drawings. Good communication skills in English.
13
Q/A Inspectors
5+
Engineering Degree Holder. Experience in establishing, defining  and implementing standards and procedures on a large scale project.
14
Design Engineers - Electrical
8+
Engineering Degree Holder. Experience in Electrical design on large scale projects. Proficiency in Designing with Good knowledge in international standards.
15
Design Engineers - HVAC
8+
Engineering Degree Holder. Experience in Mechanical design (HVAC)on large scale project. Proficiency in Designing with Good knowledge in international standards.
16
Design Engineers - Plumbing & FF
8+
Engineering Degree Holder. Experience in Mechanical design (Plumbing, Fire Fighting) on large scale project. Proficiency in Designing with Good knowledge in international standards.
17
Cost Control Engineers
5+
Engineering Degree Holder. Experience in effectively managing and analyzing cost function in a large scale project and ensuring submission of required reports in timely manner. Good communication skills.
18
Commissioning Assistants
5+
Experience in executing pre-commissioning and commissioning activities for Electro-Mechanical Projects. Good technical & communication skills.
19
Procurement Engineers - Electrical
8+
Engineering Degree Holder with Electrical materials procurement knowledge, having good negotiating skills. Good communication skill in English.
20
Mechanical Site Engineers
5+
Experience in supervising relevant mechanical works to ensure quality and that construction/installation are in accordance with drawings, specifications, and local registration. Good communication skills. Experience in HVAC or Plumbing & FF.
21
Electrical Site Engineers
5+
Electrical Engineering degree holder. Experience in supervising relevant electrical works at site to ensure quality and that construction/installation are in accordance with drawings, specifications, and local registration. Good communication skills. Experience in LV & HV.
22
Supervisors - Electrical
10+
Electrical site experience with ability to manage the site work force with minimum interference of engineers.
23
Supervisors - ELV/HV
10+
Electrical site experience in Low & High Voltage with ability to manage the site work force with minimum interference of engineers.
24
Supervisor (Cleaning/ Scaffolding)
5+
Experience in Scaffolding works and assembly. Knowledge in Safety procedures.
25
Administration Officer
8+
Graduate. Should demonstrate strong problem solving and quick decision making skills. Experience in providing day to day administrative & personnel services. Good communication skills in English.
26
Document Controller
5+
Experience in document management for construction projects. Good communication skills.  Computer knowledge. Have a complete understanding of basic Engineering discipline a plus.
27
Draughtsman - Electrical
5+
Experience in Electrical design drafting works using drafts CADs and related commercial software.  Good communication skills and able to coordinate with senior staff. Able to develop drafting works, necessary details and technical data given by designers to produce readable drawings.
28
Draughtsman - Mechanical
5+
Experience in Mechanical design drafting works using drafts CADs and related commercial software.. Experience in Mechanical Designs (HVAC, Plumbing & FF) of large scale projects. Good communication skills and able to coordinate with senior staff. Able to develop drafting works, necessary details and technical data given by designers to produce readable drawings.
29
Safety Assistants
5+
Diploma in Fire & Safety Engineering with certification in First Aid procedures.
30
Accountants
5+
Accounting Graduate. Responsible for applying accounting principles & procedures to analyze financial information, prepare accurate and timely financial reports, & statements, and ensure appropriate accounting control procedures.
31
Procurement Assistant/ Material Expeditors
5+
Experience in negotiating for best purchasing package with suppliers and sub contractors assigned. Good communication skills.
32
Transport Clerk
5+
Good communication skills. Can manage to supervise, arrange transportation and perform other actions in connection with movement of large scale materials, passengers.
33
Mechanical Store Keeper
5+
Good knowledge of basic Mechanical inventories. Experience in store management with good communication skills. Proficiency in Microsoft Excel, inventory software.
34
Electrical Store Keeper
5+
Good knowledge of basic Electrical inventories. Experience in store management with good communication skills. Proficiency in Microsoft Excel, inventory software.
35
Store Assistants
5+
Experience as a store assistant. Knowledge of all kinds of Mechanical and Electrical Inventories.

Please refer your friends or known circle interested for Overseas Job

Assuring you of Our Best Services.

 Thanks & Regards

Mr. Fakrudeen

EXECUTIVE- RECRUITMENT

AGP INTERNATIONAL SERVICES
Professional HR Consultancy, approved by govt. of India

10 Crescent Court, 963 EVR High Road, Behind Egmore Railway Station Chennai 84

Direct : +91-44-4445 0014 OFF : tel : +91 44 4445 0000     |fax: +91 44 26424514
e-mail: operation5@agpindia.com | www.agpindia.com