திங்கள், 19 டிசம்பர், 2011

100 மருத்துவக் குறிப்புகள்


1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

Abiramam panchayat election result 2011


District Name:  RAMANATHAPURAM     Townpachyat Name:  Abiramam  

Town Panchayat Chairman
1 குமணன் எம் AIADMK 1560 NotElected
2 முகம்மது அபுபக்கர் வி.ஏ DMK 2237 Elected
3 முத்துராமலிங்கம் எம்.ஏ Independent 55 Deposit Lost

Ward No:  1
1 அஜ்மல்கான் வி.எம். DMK 120 Elected
2 சாகுல் ஹமீது எம்.எஸ்.எம். AIADMK 59 NotElected
3 நெயினா முகம்மது கே. Others 22 Deposit Lost

Ward No:  2
1 அகம்மது இப்ராஹீம் எஸ்.எம். Independent 30 Deposit Lost
2 உமர்சித்திக் கே.எஸ். DMK 51 NotElected
3 சாகுல் ஹமீது ஏ. AIADMK 34 NotElected
4 முகம்மது காசிம் எஸ். Others 80 Elected

Ward No:  3
1 பாத்திமா ஜாஸ்மின் பானு மு. DMK 119 Elected
2 மஹபூப் ஜெய்லானி வி.ட்டி. AIADMK 44 NotElected
3 ஜெய்லானி பீவி எஸ்.ஏ. Independent 65 NotElected

Ward No:  4
1 அப்துல் காதர் ஆர்.ஏ. DMK 75 Elected
2 அப்துல் ரஹ்மான் அ. Independent 19 Deposit Lost
3 உமர்பாரூக் அ. Independent 18 Deposit Lost
4 நிஜாமுதீன் சேட் மு. Independent 38 NotElected
5 முகம்மது அபுபக்கர் ஆர்.எம். AIADMK 42 NotElected

Ward No:  5
1 கமிதா பானு ட்டி.எம். Independent 37 Deposit Lost
2 கனீஸ் பாத்திமா எஸ்.என். AIADMK 107 NotElected
3 சாராபானு ஏ.எஸ். DMK 116 Elected

Ward No:  6
1 கமிதா பானு பி. Others 25 Deposit Lost
2 ஜெய்லானி பீவி வி.எம். DMK 161 Elected
3 ஹமீதா பர்வீன் எஸ்.எம். AIADMK 40 NotElected

Ward No:  7
1 அரிகிருஷ்ணன் எல். INC 146 NotElected
2 வைரவன் டி Independent 184 Elected



Ward No:  8
1 முத்துச் செல்வம் எஸ் Independent 140 Elected
2 வீரப்பெருமாள் எஸ் AIADMK 132 NotElected

Ward No:  9
1 புகழேஸ்வரி என் Independent 0 Unopposed

Ward No:  10
1 கண்ணன் கே DMK 84 NotElected
2 தனுஸ்கோடிராமன் எஸ் Independent 40 Deposit Lost
3 பொன்னரசி எஸ் Independent 104 Elected
4 முத்துராமலிங்கம் சி AIADMK 80 NotElected

Ward No:  11
1 பங்கயற்செல்வி டி Independent 34 Deposit Lost
2 வரலெட்சுமி க DMK 137 Elected
3 ஜோதி பிரகாசம் மு AIADMK 114 NotElected

Ward No:  12
1 பஞ்சவர்ணம் கே DMK 0 Unopposed

Ward No:  13
1 ஆறுமுகம் மு Independent 116 NotElected
2 சரவணன் எம் AIADMK 130 Elected

Ward No:  14
1 சுப்பிரமணியன் வி AIADMK 180 Elected
2 மருது ப்பி Independent 46 Deposit Lost
3 முனியசாமி கே CPI(M) 7 Deposit Lost
4 ஜெயராமன் ப்பி DMK 146 NotElected

Ward No:  15
1 நாகராஜன் எஸ் AIADMK 57 NotElected
2 மாரி எம் Independent 198 Elected


ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை



உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்காகத் தயாராகி வருகிறார்கள். பல்வேறு தயாரிப்புகள், பணம், உடை, உணவுப் பொருட்கள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. எப்படி தவாஃப் செய்ய வேண்டும், எவ்வாறு இஹ்ராம் உடை அணிவது, மினாவிலும் அரஃபாவிலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால், மிக முக்கியமான ஒரு விஷயத்தை மட்டும் ஹஜ் பயணம் மேற் கொள்பவர்கள் மறந்து விடுகின்றனர். அது, உடல்நலம்!
ஹஜ்ஜின் போது ஹாஜிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகும் ஒரு விஷயம் ''உடல்நலம்'' குறித்ததாகும். ஏனெனில், ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களில் 60 விழுக்காட்டிற்கும் மேற் பட்டவர்கள் 60 வயதிற்கு மேலுள்ள முதியவர்கள்தாம்.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

முகமதியர்களையும்,கிறிஸ்தவர்களையும் தாய்மதம் திரும்ப (மதமாற்றம்) செய்யுங்கள்!!!



முகமதியர்களையும்,கிறிஸ்தவர்களையும் தாய்மதம் திரும்ப (மதமாற்றம்)  செய்யுங்கள்!!! என தமிழ் ஹிந்துவில் மலர்மன்னன் ஹிந்து(துவா)க்களுக்கு அரைகூவல் விடுத்திருக்கிறார்,,,

மதமாற்றம் என்பதே தவறு.தடைச்சட்டம் வேண்டும் என கொக்கரித்தவர்கள்,அதற்கு எதிராக ஆர்ப்பரித்து முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் சாடி வந்த இவர்கள்..இப்போது மதமாற்றம் செய்ய இறங்கி விட்டார்கள்...எதற்கு தங்களின் மதத்தை காக்கவா? இல்லை..பிற மதங்களை அழிக்க..(மனப்பால் குடிக்க வேண்டியதுதான்) இவர்கள் ஹிந்துமத கொள்கைகளை சொல்லி மதமாற்றம் செய்யமாட்டார்கலாம்.:( ஏன்னா புரியாதாம்.:( தவறாக புரிந்து கொள்வார்களாம்.:( அதனால்,இஸ்லாம் கிறிஸ்தவத்தில் உள்ள ஓட்டைகளை சொல்லி மாற்றப்போகிறார்களாம்!!!:)

//கீதையை அவர் படித்தால் அவரால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது, எல்லாம் தவறாகவே தோன்றும், நுட்பமான ஹிந்து சமயக் கோட்பாடுகளை இப்போது புரிய வைக்க முடியாது என்று சொன்னேன்// 
//கிறிஸ்தவ ஆலயங்களிலும் மசூதிகளிலும் ஆட்டு மந்தைகளைப் போல மக்கள் உட்கார வைக்கப்பட்டு போதகர்களால் சமூகப் பிரச்சினைகளில் இன்னவாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்படுவதுபோல் ஹிந்து ஆலயங்களில் நடைபெறுவ தில்லை என்று எடுத்துக் கூறுகிறேன்.//

//ஹிந்து சமூகச் சட்டங்களில் காலத்திற்கு ஏற்ற விதிகளை நடைமுறைக்குக் கொண்டு வருவது மிகவும் எளிதாகவே உள்ளது,//

இந்த ஈயப்புச்சுக்கு என்னால் கடுமையான விமர்சனங்களை வைக்க முடியும்.ஆனால் இந்த கட்டுரையின் பேசுபொருள் இதுவல்ல.."தேவைபட்டால் " இன்னொரு இடத்தில் பார்ப்போம்.
//ஹிந்துக்களை மத மாற்றம் செய்வது எளிதாக இருக்கிறது ஆனால் கிறிஸ்தவர்களையும் முகமதியரையும் தாய் மதம் திரும்பச்(மதமாற்றம்) செய்வது எளிதாக இல்லை. அவர்களால் முடிவது நம்மால் ஏன் முடிவதில்லை என்று யோசிக்க வேண்டும்.
நம்மாலும் முடியும் என்ற திட சங்கற்பத்துடன் முயற்சி செய்தால் முடியும் என்பதை உணர வேண்டும். ஹிந்துக்கள் ம்தம் மாறுவதைத் தடுப்பதில் ஒரு அணியினரும் மாற்றுச் சமயம் தழுவிய ஹிந்துக்களைத் தாய் மதம் திரும்பச் செய்வதில் இன்னொரு அணியினருமாகப் பணியைப் பகிர்ந்துகொண்டு இதில் இறங்க வேண்டும்.
தாய் மதம் திருமபச் (மதமாற்றம்) செய்தலை ஓர் இயக்கமாகவே தீவிரமாக நடத்தத் தொடங்கினால் அதைக் கண்டு ஏற்படும் மிரட்சியின் காரணமாகவே மத மாற்ற முயற்சிகள் பெருமளவு குறைந்து விடும். - மலர்மன்னன்//

திங்கள், 25 ஜூலை, 2011

கட்டாய மதமாற்றம்:பஜ்ரங் தள் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தின் மீது முஸ்லிம் பெண் புகார்


  Bajrang-Dal1
மங்களூர்:கர்நாடகா மாநிலம் மங்களூரில் வளச்சில் அருகே அட்யார் கண்ணூர் என்ற பகுதியைச் சார்ந்த மறைந்த இப்ராஹீம் என்பவரின் மகள் புஷ்ரா. இவர் ஓட்டுநராக பணிபுரிந்த பிரசாந்த் ஷெட்டி என்பவரை காதலித்து பின்னர் அவரை இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாற்றி திருமணம் புரிந்தார். பிரசாந்த் ஷெட்டி தனது பெயரை ஜாஃபர் என மாற்றிக்கொண்டார். இவர்களது திருமணம் நடந்து 8 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இவர்களுக்கு இக்பால் (4), இர்ஃபான் (3), ஃபாத்திமா யாஸ்மீன் (2) மற்றும் ஜலாலுதீன்(ஒன்றரை மாதம்) ஆகிய நான்கு குழந்தைகள் உள்ளனர்.
இவர்களின் வாழ்க்கை சுமூகமாகவே சென்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் ஜாஃபர் என்ற பிரசாந்த் ரெட்டி சமீப வருடங்களாக பஜ்ரங்தள் ஹிந்துத்துவா தீவிரவாத கும்பலுடன் நட்பை வளர்த்துக்கொண்டுள்ளார். பின்னர் தாங்கள் வசித்துவந்த அட்யார் கண்ணூரில் உள்ள வீட்டிலிருந்து புஷ்ராவின் விருப்பத்தை பொருட்படுத்தாமல் உடுப்பியில் உள்ள சன்க காட்டே என்ற இடத்தில் மூன்று மாதத்திற்கு முன்பு மாறியுள்ளார்.

சனி, 23 ஜூலை, 2011

இஸ்லாமியாஃபோபியா:முஸ்லிம் இளைஞருக்கு துபாய் செல்ல அனுமதி மறுப்பு


  images
கோழிக்கோடு:இச்சம்பவம் நியூயார்க்கிலோ, லண்டனிலோ, டெல் அவீவிலோ நடக்கவில்லை. கடவுளின் சொந்த நாடு (God’s own country) என்றழைக்கப்படும் கேரளாவில் நடந்த சம்பவம். துபாய் செல்வதற்கு விமான நிலையத்திற்கு வந்த முஸ்லிம் இளைஞர் ஒருவரை துபாய் செல்வதற்கு எமிக்ரேசன் (குடிபெயர்வு) அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். காரணம் வேறொன்றுமில்லை அவரது தாடிதான் பிரச்சனை.

சிறைக்கு வெளியே கைதியாக வாழும் ஒரு தந்தை

  abdulkareem
’மார்க்கரீதியான ஒழுக்கத்துடனும், சமூக மரியாதைகளுடனும் நான் வளர்த்த என் பிள்ளைகள் எந்த ஒரு குண்டுவெடிப்பிலும், மனித தன்மையற்ற செயலிலும் பங்காளிகளாக மாட்டார்கள்.எனது பிள்ளைகள் குற்றவாளிகளா? இல்லையா? என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றங்களாகும். அதற்கான வாய்ப்பை அளிக்காமல் இவ்வழக்கு காரணமின்றி இழுத்துக்கொண்டே செல்வதுதான் நாங்கள் அனுபவிக்கும் நீதி மறுப்பாகும் – இது ஒரு தந்தையின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் வேதனையான வார்த்தைகள்.
தனது 5 பிள்ளைகளில் இரண்டு பேர் தேசத்துரோகம் உள்பட பல்வேறு கடுமையான குற்றங்கள் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு அவதியுறும் வேளையில் ஜாமீனில் வெளியே கொண்டுவர கூட முடியாமல் பி.எஸ்.அப்துல்கரீம் என்ற ஆசிரியர் கடுமையான வேதனைகளை உள்ளத்திலே ஒதுக்கி வாழ்கிறார். சிறைக்கு வெளியே இவர் இருந்தாலும் ஒரு கைதியைப் போலவே இவருடைய வாழ்க்கை கழிகிறது.

ஞாயிறு, 17 ஜூலை, 2011

பேச்சின் ஒழுங்குகள்

நற்குணம்
 ஒருவனுடைய பண்புகளை அவனுடைய நடை, உடை, பாவனைகள் படம் பிடித்துக் காட்டுவதைப் போல் பல நேரங்களில் அவனது பேச்சுக்களும் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவனை நல்லவனாகவும் கொடியவனாகவும் மென்மையானவனாகவும் கடுமை காட்டுபவனாகவும் பிரதிபலிக்கச் செய்யும் சக்தி அவன் பேசும் பேச்சுக்கு உண்டு.
சில வேளைகளில் நாம் விளையாட்டாக சில வார்த்தைகளைக் கூறி விடுகிறோம். நாம் கூறிய பொருளை உண்மையில் நம் உள்ளத்தில் மனப்பூர்வமாக ஒத்துக் கொள்ளாமல் கேலிக்காக கூறிய போதிலும் கேட்பவர் அதை விபரீதமாக விளங்கிக் கொள்கிறார்.
நாம் நல்லவராக இருந்தாலும் நம்முடைய பேச்சு நம்மைத் தீயவனாக சித்தரித்து விடுகிறது. வார்த்தையை விட்டவர் நான் ஒரு பேச்சிற்காகத் தான் சொன்னேன்என்று எவ்வளவு சமாளிப்புகளைக் கூறினாலும் மனதில் பதிந்த காயம் மறையாத வடுவாகப் பதிந்து விடுகிறது.

வெள்ளி, 15 ஜூலை, 2011

இஸ்லாமும்,அடிமைகளும்!!!...

ராஜா வேலை முடித்து,கம்பெனி பஸ்ஸில் வந்து இறங்கி,எப்போதும் போகும் டீக்கடைக்குள் நுழைகிறார்.அங்கே சற்றுமுன் வந்து சேர்ந்த அவரது நண்பர் அப்துல்லா அப்போதுதான் டீ சொல்லிவிட்டு மாலைமலரை புரட்டிக் கொண்டிருக்க,..பேச்சு ஆரம்பிக்கிறது....


ராஜா:என்ன மாப்ள இன்னக்கி சீக்கிரம் வந்துட்டாப்ள இருக்கு...


அப்துல்லா:அட! வா மாப்ள!..(தம்பி இன்னோரு டீ’ப்பா,..சக்கர ஜாஸ்தி)... உன்னப்பத்திதா நெனச்சுக்கிட்டு இருந்தேன்..என்னடா பயள இன்னும் காணோமே,எப்போவும் நமக்கு முன்னாடியே வந்துருவானேன்னு...சரி போவட்டும்,வேலை எப்டி போச்சு இன்னைக்கு?..

ராஜா:என்ன எப்பவும் போலதே..காலைல ரெண்டு அவர் வேலை இருந்துச்சு மாப்ள... அப்ரோ,மேனேஜர் கெளம்பி எங்கையோ போரதா ரிஷப்ஷன்ல சொல்லிட்டு போயிட்டாரு....


அப்துல்லா:அப்ரோ நீ என்ன பண்ணிருப்பைன்னு நான் சொல்ரேன்....வேலைய அப்டியே மூட்டை கட்டி வச்சுட்டு,ப்ளாக்க ஓப்பன் பண்ணிருப்பையே.....


ராஜா: (பயபுள்ள நம்மள நல்லாவே நோட் பண்ணி வச்சிருக்கு...)வேரென்ன பன்ன ஒவ்வொரு திரட்டியா ஓப்பன் பண்ணி,நல்லது கெட்டது,கழுத குதுர எல்லாத்தையும்,படிச்சு முடிச்சாச்சு மாப்ள...ஆமா நீ என்ன ஒழுங்கா..நீ என்ன  பண்ணுன சொல்லு...


அப்துல்லா:அட நம்ம கத’தே உனக்கு தெரியுமே,..வேலை இருக்கு மாப்ள,ஆனா நம்ம மேனேஜர் டார்கெட் டேட் குடுத்துட்டு,அப்ரம் நம்ம பக்கம் வரவே மாட்டார்...அப்ரம் என்ன,டைம்  இருக்கு...ஸோ நானும் காலைல கொஞ்ச நேரத்துலையே ப்ளாக்ல நொழஞ்சுட்டேன்...
பேசிக்கொண்டே டீ குடித்துவிட்டு,அக்கவுண்ட் புக்கில் எழுதிவிட்டு இருவரும் வெளியே வருகிறார்கள்


அப்துல்லா: சரி இன்னைக்கு என்ன ஹாட் டாப்பிக் படிச்ச,அத மொதல்ல சொல்லு...


ராஜா:ம்ம்ம்ம்...ஆரம்பத்துல வெறும் மொக்கையா படிச்சுட்டு இருந்தே.அப்ரம் ஹிட்ஸ் எதுக்கெல்லா அதிகமா இருக்கோ அதப்பாத்து படிக்க ஆரம்புச்சேன்..ஆனா மாப்ள,ஹிட்ஸ் அதிகமா இருக்கிர பெரும்பாலான பதிவு,உங்க மதத்தப் பத்திதாண்டா.... போட்டு வறுத்தெடுக்குறானுவ....எவன்னே தெரியாது மாப்ள!,அவன் எழுதினதுபூரா மொக்க பதிவுதா, ஒருத்தங்கூட அவன் பளாக் பக்கம் வந்திருக்க மாட்டான்..ஆனா அவன் பதிவுக்கும், ஹிட்ஸ், காரசாரமா விவாதம்,...பாத்தா..பதிவு உங்க மதத்தப்பத்தி....நீ இதல்லா படிப்பியா???.. எப்பா முடியலடா...


அப்துல்லா: தெரியும் மாப்ள!..நானும் படிப்பேன்...படிச்சுட்டு,முடிஞ்ச வரைக்கும் விளக்கம் சொல்லுவேன்...சிலர் கேட்டுப்பாங்க...சிலர் மல்லுக்கு நிக்கிரதுக்கே வருவாங்க.. அவங்கள கண்டுக்காம போயிட்ரது மாப்ள..வேரென்ன செய்ய....


ராஜா:ஆனா மாப்ள,அதை படிக்கும் பொது சில மேட்டர்’ல எனக்கே சில கேள்வியெல்லா வந்துச்சு,சரி அவனுகள்ட்ட பேசி பிரயோசனம் இல்லைன்னு விட்டுட்டேன்...


அப்துல்லா:சரி...என்ன படிச்ச என்ன கேள்வி வந்துச்சு,என்கிட்ட கேளேன்..பதில் தெரிஞ்சா சொல்றேன்...


ராஜா: (தயங்கியவனாக) இல்ல மாப்ள எல்லா மதத்துலையும்,நல்லது கெட்டது இருக்கு... நான் ஒன்ன கேக்க,நீ பதிலுக்கு,உன் மதம் மட்டும் யோக்கியமான்னு கேட்டா,அது நமக்குள்ள நல்லா இருக்காதுலடா...அங்க ஒருத்தன ஒருத்தன் இப்டித்தா கேட்டுக்கிறானுவ. வேணாம் மாப்ள...அத உடு...


அப்துல்லா: மாப்ள!..பதில் தெரியாதவந்தாண்டா இந்த வேலையெல்லா பாக்குறது... என்னப்பத்தி உனக்கு தெரியாதா!!??? இவ்ளோ யோசிக்கிற...கேளு! தப்பா இருந்தாலும் பரவாயில்லை.தெரிஞ்சா சொல்றேன்...இல்லைன்னா கேட்டுட்டு வந்து சொல்றேன்...சும்மா கேள்ரா,,,நீதா ஏடாகூடமா கேக்க போரியா?இல்ல நாந்தா அதெப்டி நீ கேக்கலாம்னு நிக்கெப்போரேனா?.. நாம என்ன அப்டியா பழகிருக்கோம்..சொல்லு மாப்ள...


ராஜா:அதுவந்து...உங்க மதம்,மத்த மதத்துக்காரங்கள அடிமையா வச்சுருக்க சொல்லுதாமே,மத்த மதத்து நாட்டோட சண்ட போட்டு,எதிர்க்குரவங்கள கொல்லவும், இருக்குறவங்கள அடிமையாக்கி கொண்டுவந்து கொடுமைபடுத்தவும் செய்யசொல்லுதாமே... முசுலிம்க எல்லாம் வன்முறை குணம் கொண்டவங்க அது இதுன்னு...சொல்லிருந்தானுக...ஏ மாப்ள இதபத்தி நீ என்ன சொல்ர...உனக்கு எதுனாச்சும் தெரியுமா?


அப்துல்லா: அட இதுதானா?


ராஜா: என்ன மாப்ள இவ்ளோ சாதாரணமா சொல்ர??


அப்துல்லா:இல்லடா..இத கேட்டு கேட்டு,பதில் சொல்லி சொல்லி அளுத்துப் போச்சு மாப்ள...


ராஜா:அப்டியா?அப்போ உனக்கு இதுக்கு பதில் தெரியுமாடா??..அப்பாட எனக்கு மனசு அரிச்சுக்கிட்டே இருந்துச்சு மாப்ள...யார்கிட்ட கேக்குரதுன்னு...யாராச்சும் அசரத்துக்கிட்ட கேட்டா தப்பா நெனச்சுப்பாங்களோன்னு இருந்துச்சு..ஆனா உன்ன கேக்கனும்ன்னு நெனைக்கவே இல்லடா...சரி சொல்லு...


அப்துல்லா:மாப்ள!இஸ்லாத்தில் போர்,ஏன்,என்னங்கிரது இருக்கே அது பெரிய டாப்பிக்.. அதப்பத்தி பின்னால பேசுவோம்..மொதல்ல அதுக்கப்பரம் இருக்கிற அடிமைத்தனம் பத்தி பாப்போம்..அதுல இஸ்லாம் எப்புடி அணுகுதுன்னு தெரிஞ்சா,மத்த மேட்டர்’ல அவங்க சொல்ரது எல்லா எந்த அளவுக்கு உண்மைன்னு நீயே முடிவுபண்ணிக்கலாம்...


ராஜா:அதுவும் சரிதே மாப்ள...மொதல்ல அதப்பத்தி சொல்லு..நானும் கேகனும்ன்னு தா இருந்தே,,,இப்போதா ஒன்னொன்னா நியாவகம் வருது...


அப்துல்லா:மாப்ள ஒன்னொன்னா பொறும்மையா கேளு சொல்றேன்..என்ன...


ராஜா: அதுசரி மாப்ள,முசுலீம்க,அந்த காலத்துல,வேர நாட்டுல இருந்து புடுச்சுட்டு வர்ர வேர மதத்து கைதிகளைலாம்,அடச்சு வச்சு,அவங்களை அடிமைகளாக்கி,ரொம்ப கொடும படுத்துவாங்களாமே..அவங்களை கேக்க ஆளுகலே இல்லாம,பாவம் சொல்ல முடியாத கொடுமைகள் இருந்துச்சாமே!அது நெசமா? அதப்பத்தி தெரிஞ்சா சொல்லேண்டா.


அப்துல்லா:மாப்ள!அக்காலத்துல அடிமைமுறைங்கிறது தவிர்க்க முடியாத ஒன்னு... கைதிகளை அடைத்து வைத்து சோறுபோட,பராமரிக்கவுலா சத்து இல்லை.அதனால, அவங்கள,மக்களுக்கும்,போரில் கலந்துகிட்டவங்களுக்கும் கொடுத்து, அவங்ககிட்ட வேலை வாங்கிக்கவும்,பதிலுக்கு அவங்கலை பராமரிக்கவும் அனுப்பி விடுவார்கள்..ஆனா அவங்கள யாரும் கேக்காமைலாம் இல்லடா...இஸ்லாமே அவங்களுக்கான உரிமைகளை அழகா பாதுகாக்கக்கூடியதாக இருந்துச்சு,அதுமட்டும் இல்லாம இந்த அடிமைமுறை காலப்போக்குல மறைந்து போகவும் இஸ்லாம் வழிவகுத்துச்சு...இந்த மேட்டர் பெரும்பாலும் யாருக்கும் தெரியாது..


ராஜா:அப்டியா?...என்னடா சொல்ர....!!!


அப்துல்லா:ம்ம்ம் சொல்றேன் கேளு...அதாவது மாப்ள,இஸ்லாம் வர்ரதுக்கு முன்னாடியும் அக்காலத்துலையே அடிமை முறை இருந்துச்சுதான்..அவங்களை யாரும் கேக்க முடியாது... சித்ரவதைன்னா,உங்கூட்டு எங்கூட்டு சித்ரவதை இல்லை...அவங்கள அவங்களோட எஜமான் கொடூரமா கொன்னேபோட்டாலும் கேக்க நாதியில்ல...ஆனா இஸ்லாம் வந்ததுக்கப்பரம், ஒவ்வொன்னுக்குமான சட்டதிட்டங்கள் அல்லாஹ்,அப்ரம் நபி (ஸல்) மூலமா முஸ்லிம்களுக்கு வந்துகிட்டே இருந்துச்சு..அதுல அடிமைகளா இருந்தவங்களும் விதிவிலக்கில்ல...அவங்களோட உரிமைகளையும் இஸ்லாம் கவனத்துல கொள்லாம இல்ல....அடிமைகள் மீதான எஜமானர்களின் எல்லை என்னாங்கிறத தெளிவா நபி (ஸல்) சொல்லிருக்காங்க..அத மீறுறவங்கள கண்டிச்சு இருக்காங்க,அதுமட்டும் இல்லாம.....!!! இரு உனக்கு தெளிவா புரியனும்ன்னா அது சம்பந்தமான தெளிவான ஹதீஸயே உனக்கு சொல்றேன்...
ம்ம்ம்ம்ம்......ஸஹீஹ் முஸ்லிம்’ல பதியப்பட்ட 3411வது ஹதீஸை ஹிலால் பின் யசாஃப் (ரஹ்) என்பவர் அறிவிக்கிறார்....அதாவது..
ஒரு முதியவர் அவசரப்பட்டு தம் அடிமைப் பெண்ணின் முகத்தில் அறைந்துவிட்டார். அவரிடம் சுவைத் பின் முகர்ரின் (ரலி) அவர்கள், "அடிப்பதற்கு அவளது மென்மையான முகம்தான் கிடைத்ததா? பனூ முகர்ரின் குடும்பத்தின் ஏழு உறுப்பினர்களில் நானும் ஒருவன் ஆவேன். எங்களிடம் ஒரே ஓர் அடிமைப் பெண் மட்டுமே இருந்தாள். அவளை எங்களது குடும்பத்துச் சிறியவர் ஒருவர் அடித்துவிட்டார். அப்போது அவளை விடுதலை செய்துவிடுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள்'' என்று கூறினார்கள்.
அதுமட்டுமில்லாம ஹதீஸ் 3408ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்"ஒருவர் தம் அடிமையை அறைந்துவிட்டால், அல்லது அடித்துவிட்டால், அவரை விடுதலை செய்து விடுவதே அதற்குரிய பரிகாரமாகும் என தெளிவாக சொல்லிவிட்டார்கள்,,


ராஜா:என்ன மாப்ள சொல்ர???..அப்போ அடிமை ஈஸியா விடுதலை ஆகிடலாமே...எந்த எஜமான் தா தனக்கு கெடச்ச அடிமைய அடிக்காம இருப்பான்...


அப்துல்லா:ம்ம்ம்..நீ சொல்றது சரிதா மாப்ள,...ஆனா பாரு இவங்களோட வேலைகள செய்றதுக்கு கட்டாயம் ஆள் தேவை...அக்கால,அதுவும் பாலைவன வாழ்க்கைல...எல்லா வேலையும் தானே செய்துக்கிறதுங்கிறது அத்தனை சுலபமான காரியம் இல்லையே....அதும் வயதானவங்க.. பணக்காரங்க... இவங்காளாலைலாம் வேலைக்கு ஆள் இல்லாம முடியாதே....
ஸோ..கட்டாயம் ஒரு அடிமை வேலையாள் வேணும்..ஆனா அவன் மேல கைவச்சுட்டா, அவன விடுதலை செய்தே ஆகனும்...அப்போ யார்தா அடிப்பாங்க சொல்லு....


ராஜா:அதுவுஞ்சரிதா மாப்ள...ஆனா எத்துன பேர்தா இப்டி அடிச்சதையும்,அதனால விடுதலை செய்ரதையும்,செய்யப்போராங்க...அவங்க அடிமைய மெரட்டி வச்சுருக்கலாம்ல... அப்போ அவங்க கஷ்டப்படுரது யாருக்கு தெரியப்போகுது??


அப்துல்லா:மாப்ள! நீ கேக்குறது வாஸ்தவந்தா...ஆனா இந்தக்காலம் மாதிரி இல்ல அந்த கால இஸ்லாமிய ஆட்சி..யாரும் போய் நேரடியாவே ஆட்சியாளர்களை சந்திக்கலாம்...அப்டி இருக்கும் போது இந்த அடிவாங்கிய அடிமைகளுக்கு என்ன தடை இருக்கும் அவங்க விடுதலையாக ஒரு பொன்னான வாய்ப்பான தன் எஜமான் அடித்த சம்பவத்தை முறையிட???..ம்ம்..
அதுமட்டும் இல்லாம,அக்கால மக்கள் தான் ஒரு துரும்பை நகர்த்தினாலும்,அது அல்லாஹ்வுக்கும்,அவனது தூதருக்கும் பொருத்தமான வழியில்தான் செய்ய விரும்புவார்கள்..அவர்களின் முழுவாழ்வுமே, அல்லாஹ்,நபி(ஸல்),மறுமை,சொர்க்கம்,நரகம், அடிப்படையில்தான்... தான் மறைமுகமாக ஒரு காரியத்தை செய்துவிட்டாலும்,அதை யாரும் பாக்காலைனாலும்,அல்லாஹ் பாக்குறான்கிற நம்பிக்கை அவர்களின் உள்ளத்தில் வழுவாக இருக்கும் அதனால் அவர்கள் அப்படி செய்ய சாத்தியம் இல்லை...
அதுமட்டும் இல்லாம,நபி(ஸல்) தங்கள் மீது ஏதாவது கோபப்பட்டு விட்டாலோ,அல்லது சின்ன தவறை செய்து விட்டாலோ, அதுக்காக நாள்பூரா அழுது அல்லாஹ்விடம் மன்னிப்புகேட்கும் அளவுக்கு, பயபக்தியோட இருந்தவங்க அவங்க...
இது சம்பந்தமான இன்னோரு ஹதீஸ உனக்கு சொன்னா புரியும்ன்னு நெனைக்கிறேன்...
ஸஹீஹ் முஸ்லிம்’ல பதியப்பட்ட 3414வது ஹதீஸை அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) என்பவர் அறிவிக்கிறார்....அதாவது..
நான் (ஒரு முறை) என் அடிமையை அடித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்குப் பின்னாலிருந்து யாரோ, "அபூ மஸ்ஊதே நினைவிருக்கட்டும்! இவர்மீது உமக்கிருக்கும் அதிகாரத்தைவிடப் பன்மடங்கு அதிகாரம் உம்மீது அல்லாஹ்வுக்கு இருக்கிறது'' என்று கூறுவதை நான் செவியுற்றேன். நான் திரும்பிப் பார்த்தேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். உடனே நான், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் உவப்புக்காக (இவரை நான் விடுதலை செய்துவிட்டேன்) இவர் சுதந்திரமானவர்'' என்று கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அறிந்துகொள்! நீ இவ்வாறு செய்திருக்காவிட்டால் "நரகம் உம்மை எரித்திருக்கும்' அல்லது "நரகம் உம்மைத் தீண்டியிருக்கும்'' என்று கூறினார்கள்.


ராஜா:மாப்ள சத்தியமா சொல்றேண்டா..நீ சொல்றத என்னால நம்பவே முடியல... எதிரிகளையும் மத்த மதத்துக்காரங்களையும் கொலை செஞ்சா,முசுலிம்களுக்கு  சொர்க்கம் இருக்குன்னுல்ல,நா கேள்விபட்டு இருக்கேன்..அதனால முசுலிம்க எல்லா மத்தவங்கள அநியாயமா கொலை செஞ்சதாவும்ல சொல்ராங்க...ஆனா நீ சொல்ற மேட்டர் அதுக்கு ஆப்போஸிட்டாவுல இருக்கு...
இப்போ நா சொன்னது உண்மையா இருந்தா,அடிமைகள மட்டும் ஏன் இப்டி அடிக்கக்கூட கூடாதுன்னு சொல்லனும்??..அதும் அவங்க மத்த மதத்துக்காரங்கவேர,அல்லா மத்த மதத்துக்காரங்கள கொல்லச்சொல்லிருந்தா??? எப்டி அவங்கள அடிச்சாக்கூட முசுலிம்களுக்கே நரகம்ன்னு சொல்லிருப்பாரு???..


அப்துல்லா:ஹ்ம்ம்...நீ கேக்குறது சரிதா மாப்ள!!!..யாராவது,கொலையே செய்யச் சொல்லிட்டு,அதுக்கு உனக்கு சொர்க்கம்ன்னு சொல்லிட்டு,அப்ரம் அதெ ஆள பராமரி, அடிக்கக்கூட செய்யாத, அடிச்சா மவனே உனக்கு நரகம்ன்னு சொல்லுவாங்களா???.. அதுமட்டும் இல்ல இன்னும் இருக்கு,அதக்கேட்டா நீ இன்னு ஆச்சிரியப்படுவ...


ராஜா:என்னதது??? சொல்ரா!!!...


அப்துல்லா:ம்ம்...அதாவது,இப்ப நம்ம ஊர் பழக்கத்த எடுத்துக்கோ,வீட்டு வேலைக்காரி, வேலை எல்லா செஞ்சு,சமச்சு எல்லா முடிக்கிராங்கன்னு வச்சுக்கோ,அவங்கல எப்டி நம்மூர்ல நடத்துவோ...சொல்லு...


ராஜா:என்ன!!!...நாம டைனிங் டேபிள்ல உக்காந்து சாப்ட்டுட்டு,மிச்சம் இருக்கிறத, அவங்களுக்குன்னே ஒரு தட்டு வச்சிருப்போம்ல,அதுல போட்டு அடுப்பாங்கரைலையோ, இல்ல கொல்லைலயோ ஒக்காந்து சாப்புட சொல்லுவோம்...ஆமா இதை ஏங்கேக்குர....


அப்துல்லா:விஷயம் இருக்கு மாப்ள..அதாவது நமக்கு எந்த உரிமையும் இல்லாத சம்பளத்துக்கு வேலைபாக்குர வேலையாளுக்கு நாம குடுக்குர மரியாதை இப்டின்னா, இன்னும் அடிமைன்னா நாமல்லா என்ன பண்ணுவோம்...ஆனா இஸ்லாம் அடிமைகள அரவணைக்கிர இன்னோரு விஷயத்த சொல்றேன் கேளு...
ஸஹீஹ் முஸ்லிம்’ல பதியப்பட்ட 3421வது ஹதீஸை அபூஹுரைரா (ரலி) என்பவர் அறிவிக்கிறார்....அதென்னான்னா!!!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருடைய பணியாளர் வெப்பத்தையும் புகையையும் தாங்கிக்கொண்டு உணவு சமைத்துக் கொண்டுவந்தால், அவரையும் தம்முடன் அமரச் செய்து அவர் உண்ணட்டும். உணவு குறைவானதாக இருந்தால் அதில் ஓரிரு கவளங்களையாவது அவரது கையில் வைக்கட்டும்.அப்டீன்னு.........


ராஜா:எது???..அடிமைகள சரிக்கு சரியா உக்காரவச்சு சாப்படு போடனுமா???..மாப்ள அப்ரோ என்னடா அடிமை???..அவன அடிமைன்னு சொல்ரதுக்கு வாய்ப்பே இல்லியே!!!


அப்துல்லா:ம்ம்ம்..இன்னும் கேளு...
ஸஹீஹ் முஸ்லிம்’ல பதியப்பட்ட 3419வது ஹதீஸை மஅரூர் பின் சுவைத் (ரஹ்)  என்பவர் அறிவிக்கிறார்....
நான் அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள்மீது ஒரு மேலங்கியும் அவர்களுடைய அடிமை யின் மீது அதே மாதிரியான மேலங்கியும் இருப்பதைக் கண்டேன். நான் அது குறித்து அவர் களிடம் வினவியபோது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஒரு (அடிமை) மனிதரை ஏசும் போது, அவருடைய தாயைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசிவிட்டேன். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), "நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் உள்ள மனிதராகவே இருக்கின்றீர். (அடிமைகளான) அவர்கள் உங்கள் சகோதரர்களும் ஊழியர்களும் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளான். யாருடைய ஆதிக்கத்தின் கீழ் அவருடைய சகோதரர் இருக்கிறாரோ அவர் தாம் உண்பதிலிருந்து அவருக்கு உணவளிக்கட்டும். தாம் அணிவதிலிருந்து அவருக்கு அணியத் தரட்டும்அவர்களது சக்திக்கு மீறிய பணியைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்தாதீர்கள். அவ்வாறு அவர்களது சக்திக்கு மீறிய பணியை அவர்களுக்குக் கொடுத்தால் அப்பணியில் அவர்களுக்கு நீங்களும் ஒத்துழையுங்கள்'' என்று கூறினார்கள்.
இதுதா உள்ளதுலையே ஹைலைட்டு...அடிமைகள் எஜமானர்களுக்கு சகோதரர்களாகவும், அவர்கள் அணிவதையே அடிமைகளுக்கு அணியத்தரவேண்டும் என்றும்,அவர்கள் உண்பதையே அவர்களுக்கும் தரவேண்டும்ன்னு சொன்ன நாம ஒத்துப்போமா??? ம்ம்ஹும்... ஆனா அவங்க அதை நடைமுறைபடுத்துனாங்க...
அதுமட்டுமில்லாம,அளவுக்கு மீறி வேலை கொடுக்கக்கூடாது என்பதும்,அப்படி கொடுத்தால் எஜமானன் அவனுக்கு உதவிபுரியவேண்டும் என்பதும் கட்டளை.
இனோன்னு...நாமெல்லா நெனைக்கிற மாதிரி முஸ்லிம்களுக்கு,பிற மதத்தவங்கதா அடிமையா இருப்பாங்கன்னு...ஆனா அடிமைகள்ல முஸ்லிம்களும் இருந்திருக்காங்க....இதை ஹதீஸ் 3422மெய்ப்பிக்கிறது..கடைசி கடைசியா அடிமைகளுக்கு இஸ்லாம் வழங்கிய  சிறப்பை சொல்ல ஒரே ஒரு ஹதீஸ மட்டும் சொல்றேன்...
அது என்னான்னா...ஸஹீஹ் முஸ்லிம்’ல 3423 வது ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்.
"அபூஹுரைராவின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதும், ஹஜ்ஜும், என் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையும் இல்லாமலிருந்தால் நான் (ஒருவரின்) அடிமையாக இருக்கும் நிலையில் இறப்பதையே விரும்பியிருப்பேன்'' என்றார்கள்.
ஒரு சுதந்திரமான முஸ்லிமே அடிமையா இருந்து மரணிக்க ஆசைப்படும் அளவுக்கு அடிமை” என பொருள்பட சொல்லப்பட்டவர்கள் இஸ்லாத்தில் சிறப்புப்பெற்று இருந்துள்ளனர்.
மேலும் இப்படியாக பேணப்பட்ட அடிமை முறையானது,மேலும் சிலர் செய்துவிடும் தவறுகளுக்கு பரிகாரமாகவும்,நன்மையை கருதியும்,அடிமை உரிமை விடப்பட்டு, காலப்போக்கில் அடிமைகள் அருகி...குறுகிய காலத்திலே அடிமை முறை இல்லாமல் போனதற்கும் இஸ்லாம் வகுத்த சட்டங்களே காரணம்...
இப்போ என்ன சொல்ர????


ராஜா:(மலைத்தவனாக)...டே நண்பா! ஒன்னும் சொல்ரதுக்கே இல்லட...நா என்னமோன்னு நெனச்சுட்டு இருந்தேன்....ஒரு அடிமை விஷயத்துல இவ்ளோ சட்டதிட்டங்கள் இருக்கா??? அதும் ஒரு முஸ்லிம் அடிமையா இருக்க விரும்பக்கூடிய அளவுக்கு சிறப்பானதா????...இந்தக்காலத்துலகூட சிந்திக்கமுடியாத அளவுக்கு இஸ்லாம் அடிமைகளை,சே,,இந்த வார்த்தையே தப்பு..வேலையாள்களை நடத்தியவிதம்,என்னை பிரம்மிக்க வெக்கிது மாப்ள.....என்ன சொல்ரதுன்னே தெரியலடா....
இன்னும் நெரைய கேள்விகளும்,குழப்பங்களும் எனக்கு இருக்கு....அடுத்து சந்திக்கும் போது பேசுவோம்டா....இவ வேர மிஸ்கால் அடிக்க ஆரம்பிச்சுட்டா!..இனியும் லேட்டா போனா டின்னு கட்டிடுவா மாப்ள....நேரம் ஆகுது..நா கெளம்புறேன்,,..


அப்துல்லா:ஓக்கே மாப்ள....நீ மொதல்ல கெலம்புரியோ இல்லையோ,நா கெலம்புறேன்... பேசுனதுல நேரம் போனதே தெரியலையப்பா!!!..உன் தங்கச்சிய பத்திதா  உனக்கு நல்லா தெரியுமே!!....ஸேம் ப்ளட்....

அன்புடன்
ரஜின்