ஞாயிறு, 3 ஜூலை, 2011

"அல் இஸ்ரா" & "அல் மிஃராஜ்"

cid:image004.gif@01CA0724.3644B510
 

அங்கீகாரம் பெற்ற ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் பட்டியல்

ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், விரைவில் மாணவர்ச் சேர்க்கை நடைபெற உள்ளது. ஓரிரு நாளில், கவுன்சிலிங் குறித்த அறிவிப்பு வெளிவரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அங்கீகாரத்துடன் இயங்கும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் பட்டியல், மாவட்ட வாரியாக, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தக் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வதற்கு தகுதியான, அங்கீகாரத்துடன் இயங்கும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் பட்டியல், மாவட்ட வாரியாக, ஆசிரியர் கல்வித்துறை இணையதளத்தில் (www.dtert.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது.

திங்கள், 6 ஜூன், 2011

108 இலவச ஆம்புலன்சில் பணியாற்ற விருப்பமா?

தமிழக அரசின் சுகாதார திட்டத்தின் கீழ் இயங்கும் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தில் மருத்துவ உதவியாளர், டிரைவர்கள் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் ஜூன் 9ம் தேதி நடக்கிறது.
 
இதுகுறித்து, ‘108’ ஆம்புலன்ஸ் சேவைக்கான தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்


1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,,அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, தொலைபேசி: 2829 5445
2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530
3. சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலை, சென்னை - 06
4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, சென்னை - 06
5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)
6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட், ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34
7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34
8. மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை ,சென்னை - 02
9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட், ஜபார்ஷா தெரு, திருச்சி.
10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை - 03
11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட், டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு, அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564
12. அஸ்மா காசிம் அறக்கட்டளை ,மாண்டியத் சாலை, எழும்பூர் - சென்னை – 08
13. ராஜகிரி பைத்துல்மால், கீழத் தெரு, ராஜகிரி - 614 207
14. டாம்கோ 807, - அண்ணா சாலை, 5 வது சாலை, சென்னை
15. ஹாஜி. அஹமது மீரான், Managing Director Professional Courier's
16. 7 மகாராஜா சூர்யா ராவ் ரோடு, ஆழ்வார்பேட்டை - சென்னை – 18
17. மியாசி, புதுக் கல்லூரி வளாகம், பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14
18. S I E T கே.பி. தாசன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18

வியாழன், 2 ஜூன், 2011

மத்தியபிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் ஆட்சி : அமைச்சர் பூரியா




மண்ட்லா : மத்திய பிரதேச மாநிலத்தில், பாஜ ஆட்சி செய்யவில்லை என்றும், அங்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகளே ஆட்சி செய்து வருவதாக மத்திய அமைச்சரும், மாநில காங்கிரஸ் கட்சி ‌தலைவருமான காந்திலால் பூரியா தெரிவித்துள்ளார். மத்தியபி‌ரதேச மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியினரின் கூட்டம் நடைபெற்றது. இதில் பெருந்திரளான விவசாயிகளும் கலந்துகொண்டனர். அப்போது பூரியா கூறியதாவது, மாநில ஆட்சியை, பாஜ கட்சி, ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங் தள் கட்சிகளிடம் தந்துவிட்டது. மத்திய அரசின் நிதியை பெறும் மாநில அரசு, அதனை தகுந்த வகையில் பயன்படுத்தாமல் அதனை பதுக்கிவைப்பதிலேயே அவர்கள் முனைப்புடன் உள்ளனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், மாநிலத்தின் ஒவ்வொரு கிராமங்களுக்கும் ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டது. அதன் சிறுதுளி பயன் கூட பயனாளர்களுக்கு சென்று சேரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை என்று அவர் கூறினார்.
Source: Dinamalar

செவ்வாய், 31 மே, 2011

கமலாதாஸ் – ஸுரையா


கேரள பத்திரிக்கை துறையில் முத்திரை பதித்திருக்கும் பெண் எழுத்தாளர் டாக்டர் கமலாதாஸ் கடந்த 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாள் அன்று தாம் இஸ்லாத்தில் இணைந்து விட்டதாக உலகுக்கு அறிவித்தார். அத்தோடு தமக்கு ஸுரையா என்று புதிய பெயரைச் சூட்டிக் கொண்டதாகவும் பிரகடனப்படுத்தினார் அவர்.
கேரளாவில் எர்ணாகுலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு மாநாட்டைத் துவக்கி வைத்த போது அவர் திடீரென அந்த அறிவிப்பை வெளியிட்டார். அவரது உரைநடை மற்றும் கவிதை நடைக்கு மக்களிடத்தில் சிறந்த வரவேற்பிருந்ததால் அவரது இந்த திடீர் அறிவிப்பு மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திற்று.

கல்கி


ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.
இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.