வியாழன், 2 ஜூன், 2011

மத்தியபிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் ஆட்சி : அமைச்சர் பூரியா




மண்ட்லா : மத்திய பிரதேச மாநிலத்தில், பாஜ ஆட்சி செய்யவில்லை என்றும், அங்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகளே ஆட்சி செய்து வருவதாக மத்திய அமைச்சரும், மாநில காங்கிரஸ் கட்சி ‌தலைவருமான காந்திலால் பூரியா தெரிவித்துள்ளார். மத்தியபி‌ரதேச மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியினரின் கூட்டம் நடைபெற்றது. இதில் பெருந்திரளான விவசாயிகளும் கலந்துகொண்டனர். அப்போது பூரியா கூறியதாவது, மாநில ஆட்சியை, பாஜ கட்சி, ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங் தள் கட்சிகளிடம் தந்துவிட்டது. மத்திய அரசின் நிதியை பெறும் மாநில அரசு, அதனை தகுந்த வகையில் பயன்படுத்தாமல் அதனை பதுக்கிவைப்பதிலேயே அவர்கள் முனைப்புடன் உள்ளனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், மாநிலத்தின் ஒவ்வொரு கிராமங்களுக்கும் ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டது. அதன் சிறுதுளி பயன் கூட பயனாளர்களுக்கு சென்று சேரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை என்று அவர் கூறினார்.
Source: Dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக