வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

முகமதியர்களையும்,கிறிஸ்தவர்களையும் தாய்மதம் திரும்ப (மதமாற்றம்) செய்யுங்கள்!!!



முகமதியர்களையும்,கிறிஸ்தவர்களையும் தாய்மதம் திரும்ப (மதமாற்றம்)  செய்யுங்கள்!!! என தமிழ் ஹிந்துவில் மலர்மன்னன் ஹிந்து(துவா)க்களுக்கு அரைகூவல் விடுத்திருக்கிறார்,,,

மதமாற்றம் என்பதே தவறு.தடைச்சட்டம் வேண்டும் என கொக்கரித்தவர்கள்,அதற்கு எதிராக ஆர்ப்பரித்து முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் சாடி வந்த இவர்கள்..இப்போது மதமாற்றம் செய்ய இறங்கி விட்டார்கள்...எதற்கு தங்களின் மதத்தை காக்கவா? இல்லை..பிற மதங்களை அழிக்க..(மனப்பால் குடிக்க வேண்டியதுதான்) இவர்கள் ஹிந்துமத கொள்கைகளை சொல்லி மதமாற்றம் செய்யமாட்டார்கலாம்.:( ஏன்னா புரியாதாம்.:( தவறாக புரிந்து கொள்வார்களாம்.:( அதனால்,இஸ்லாம் கிறிஸ்தவத்தில் உள்ள ஓட்டைகளை சொல்லி மாற்றப்போகிறார்களாம்!!!:)

//கீதையை அவர் படித்தால் அவரால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது, எல்லாம் தவறாகவே தோன்றும், நுட்பமான ஹிந்து சமயக் கோட்பாடுகளை இப்போது புரிய வைக்க முடியாது என்று சொன்னேன்// 
//கிறிஸ்தவ ஆலயங்களிலும் மசூதிகளிலும் ஆட்டு மந்தைகளைப் போல மக்கள் உட்கார வைக்கப்பட்டு போதகர்களால் சமூகப் பிரச்சினைகளில் இன்னவாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்படுவதுபோல் ஹிந்து ஆலயங்களில் நடைபெறுவ தில்லை என்று எடுத்துக் கூறுகிறேன்.//

//ஹிந்து சமூகச் சட்டங்களில் காலத்திற்கு ஏற்ற விதிகளை நடைமுறைக்குக் கொண்டு வருவது மிகவும் எளிதாகவே உள்ளது,//

இந்த ஈயப்புச்சுக்கு என்னால் கடுமையான விமர்சனங்களை வைக்க முடியும்.ஆனால் இந்த கட்டுரையின் பேசுபொருள் இதுவல்ல.."தேவைபட்டால் " இன்னொரு இடத்தில் பார்ப்போம்.
//ஹிந்துக்களை மத மாற்றம் செய்வது எளிதாக இருக்கிறது ஆனால் கிறிஸ்தவர்களையும் முகமதியரையும் தாய் மதம் திரும்பச்(மதமாற்றம்) செய்வது எளிதாக இல்லை. அவர்களால் முடிவது நம்மால் ஏன் முடிவதில்லை என்று யோசிக்க வேண்டும்.
நம்மாலும் முடியும் என்ற திட சங்கற்பத்துடன் முயற்சி செய்தால் முடியும் என்பதை உணர வேண்டும். ஹிந்துக்கள் ம்தம் மாறுவதைத் தடுப்பதில் ஒரு அணியினரும் மாற்றுச் சமயம் தழுவிய ஹிந்துக்களைத் தாய் மதம் திரும்பச் செய்வதில் இன்னொரு அணியினருமாகப் பணியைப் பகிர்ந்துகொண்டு இதில் இறங்க வேண்டும்.
தாய் மதம் திருமபச் (மதமாற்றம்) செய்தலை ஓர் இயக்கமாகவே தீவிரமாக நடத்தத் தொடங்கினால் அதைக் கண்டு ஏற்படும் மிரட்சியின் காரணமாகவே மத மாற்ற முயற்சிகள் பெருமளவு குறைந்து விடும். - மலர்மன்னன்//
தாய்மதமாம்!..இவர்கள் அவ்வப்போது ஊண்டி நிற்கும் பரிணாம கொள்கையில் மனிதனுக்கு தாய் குரங்குதான்(இவர்கள் கூற்றுப்படி),அப்போ எல்லாம் குரங்காகத்தான் மாறவேண்டும்..மதத்தில் ஏது தாய்மதம்,தந்தை மதம் எல்லாம்??.
தாய்மதமாம்!..உலகத்துலையே இஸ்லாம்தான்,அல்லது கிருஸ்தவம்தான் தாய்மதம்ன்னு நிருபிச்சுட்டா,இவங்க எல்லா அப்டியே தாய் மதத்துக்கு ஓடி வந்துடுர மாதிரித்தான்..
இவர்களது இரு அணியினரும்,இயக்கமாக செயல்பட்டு,பிற மக்கள் மத்தியில் ”ஏற்படுத்தும் மிரட்சி” என்ன என்பதை கொஞ்சம் கீழே உள்ள செய்தியை பார்த்தால் விளங்கிவிடும்..
JULY 22, கர்நாடக மாநிலம் உடுப்பியில் சரலெபெட்டு சிவபாடி உமாமஹேஸ்வரி கோவிலருகே வசித்து வரும் முஸ்லிம் பெண் புஷ்ரா. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு ஜாபர் என்பவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தற்போது இவர்களுக்கு இக்பால் (4), இர்பான் (3), பாத்திமா யாஸ்மீன் (2) மற்றும் ஜலாலுதீன் என்ற ஒன்றரை மாத கைக்குழந்தையும் உள்ளனர். மணிப்பால் சரலெபெட்டு சிவபாடி ஸ்ரீ உமாமகேஸ்வரி கோவில் அருகே குடும்பத்துடன் வசித்துவரும் புஷ்ராவை, பஜ்ரங்தள் தீவிரவாத அமைப்பைச் சார்ந்த குண்டர்கள் மனோகர் என்பவனது தலைமையில் புஷ்ராவின் கணவன் ஜாபர் முன்னிலையில் அவரது வீட்டுக்குள் புகுந்து வலுக் கட்டாயமாக அருகிலுள்ள கோவிலுக்கு இழ்த்துச்சென்று இந்து மதத்திற்கு மாறும்படி மிரட்டியுள்ளனர்.
புஷ்ரா இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, தான் இஸ்லாமிய மதத்திலிருந்து வெளியேற விரும்பவில்லை என்று உறுதியாகச் சொன்னபோது குழந்தைகளைக் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர். கோவில் பூசாரியிடம் புஷ்ரா இந்துவாக விரும்பவில்லை என்றும் இஸ்லாம் மதத்திலேயே தொடரவிரும்புவதாகச் சொல்லி மன்றாடிய பிறகும் பூசாரி வலுக்கட்டாயமாக மதமாற்றும் (பிரவர்த்தன்) நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.

மங்களூர் காவல்துறை ஆணையர் அலோக் மோகனிடம் நேற்று அளித்த புகாரில் தன்மீதான கட்டாய மதமாற்ற முயற்சிகளையும், தனது உயிருக்கு ஆபத்திருப்பதையும் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில் தனது கணவன் ஜாபர் முன்பாகவே பஜ்ரங்தள் தலைவன் மனோகர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், குழந்தைகளைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதையும் கண்ணீருடன் தெரிவித்தார்.

கோவிலில் நடந்த கட்டாய மதமாற்ற நிகழ்ச்சியில் தனது எதிர்ப்பை தெரிவித்தபோது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்பதால் அமைதியாக இருந்துள்ளார். இதைக்காரணமாக வைத்து புஷ்ரா இந்துவாக மதம் மாறிவிட்டதாக வதந்தி பரவியதால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


இவரது கணவன் ஜாபர், திருமணத்திற்கு முன்பு பிரசாந்த் செட்டி என்ற பெயருடன் இந்துவாக இருந்துள்ளார். புஷ்ராவை காதலித்து,திருமணம் செய்வதற்காக முஸ்லிமாக மாறி,திருமணம் செய்துகொண்ட பிறகு அடுத்தடுத்து குழந்தைகளைக் கொடுத்துவிட்டு, தற்போது தீவிரவாத பஜ்ரங்தள் குண்டர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளான். அவரது வீட்டிற்கு தீவிரவாத பஜ்ரங்தள் குண்டர்களையும் அழைத்து வந்ததோடு, அவன் முன்னிலையிலேயே புஷ்ராவை அவர்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதையும் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளான்.

தற்போது அவனிடமிருந்து தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு விவாகரத்து கோரியுள்ளார். இனிமேல் அந்த கொடிய மிருகத்துடன் வாழ்வதற்கு தனக்கு விருப்பமில்லை என்றும் கண்ணீருடன் தெரிவித்தார். மேலும், இதை போலீஸில் தெரிவித்தால் குடும்பத்துடன் கொன்று விடப்போவதாக தீவிரவாத பஜ்ரங்தள் குண்டர்கள் மிரட்டி வருகின்றனர். புஷ்ராவின் புகாரை ஏற்றுக்கொண்ட மங்களூர் காவல்துறை ஆணையர், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

http://www.coastaldigest.com/index.php?option=com_content&view=article&id=27598:muslim-woman-accuses-bajrang-dal-of-forced-conversion-urges-igp-to-take-action-&catid=57:news-stories&Itemid=68



சிந்திக்கவும்: முஸ்லிம் பெண்களே எச்சரிக்கை!!! ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தில் ஒரு அஜண்டாவே (SMART FRIENDS) இருக்கிறது முஸ்லிம் பெண்களை காதலித்து திருமணம் செய்து அவர்களை மதம் மாற்றுவது, அல்லது கைவிடுவது. ஹிந்துவா இயக்கங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு வித வெறியை தங்கள் இயக்கத்தினரிடம் வளர்த்து வருகின்றனர். எதாவது ஒரு விசயத்தில் முஸ்லிம்களை நஷ்டப்படுத்தி, துன்பப்படுத்தி, ஒட்டுமொத்தமாக முஸ்லிம் சமூகத்தை பலகீனப்படுத்துவது.அதில் முஸ்லிம்கள் மீதான திட்டமிட்ட இன அழிப்பு,அவர்களின் சொத்துக்களை நாசம் செய்வது,சூரையாடுவது,தீவிரவாத பேனரின் கீழ் அனைவரையும் கொண்டுவந்து அவர்களை மனதளவில் முடமாக்குவது,பின் இது போல பெண்களை குறிவைத்து,சீரழித்து அதில் இன்பம் காண்பது. இப்படிப்பட்ட இவர்களை ஹிந்த்துதுவா வெறி பிடித்த சைகோகள் என்று சொல்லலாம்..

சமீபத்தில் இந்து முன்னனி தலைவன் இராமகோபாலன் "ஒரு முஸ்லிம் பெண்னை காதலித்து, ஹிந்துவாக்கி மணம் புரியும் ஆணுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு" என அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் எப்படி முஸ்லிம் பெண்களை தங்கள் காதல் வலையில் வீழ்த்தி அவர்களின் சீரழித்து,கைவிடுவது என்ற பயிற்சியும் ஹிந்து(துவா) இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் என்றுமில்லாத வகையில் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது.

இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து இதுவரை நமது கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மட்டும் பல முஸ்லிம் பெண்கள மாற்று மத ஆண்களுடன் ஓடிப்போய் இந்துவாக மதம் மாறி திருமணம் முடித்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இதற்கு இந்து அமைப்புக்களும், ஓட்டைகள் பல கொண்ட நமது சட்டமும் துணை போகின்றது.

மதம் மாறுவதும்,ஓடிப்போவதும் மட்டுமே நம் கண்களுக்கு தெரியும்,ஆனால் அதன் பின்னர் அவர்கள் படும் கஷ்ட,நஷ்டங்கள்,அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.தன் சுய முடிவில் அனைவரையும் உதரிவிட்டு,பெற்றோரையும் உற்றாரையும் கேவலப்படுத்திவிட்டு ஓடிப் போனவர்கள்,தங்களை இழந்து,பின் அதில் இருந்து மீளமுடியாமலும்,மேலே சகோதரி புஸ்ரா போல் மீண்டாலும்,குடும்பத்தினரிடம் சேரமுடியாமலும்,வாழ வழியில்லாதவர்களாக வக்கற்றவர்களாக தெருவில் நிற்கிறார்கள்..இதற்கிடையில் இவர்கள் தவறாது கையில் பிள்ளைகளை திணித்துவிடப் பட்டுவிடுவார்கள்,பிள்ளைகளை காப்பாற்ற தவறான வழிக்கு செல்வதும்,வேறு வழியில்லாது விபச்சாரத்தில் வீழ்ந்துபோவது,இதன் உச்சகட்ட கொடுமை...

உண்மையில் இந்த ஹிந்துத்துவ வெறியர்கள் நாடுவது இதைத்தான்..அது அவர்களின் முதல் திட்டமான காதல் என்ற வலை சரியாக விரிக்கப்பட்டவுடனே,இத்திட்டத்தின் வெற்றி உறுதியாகிவிடுகிறது.

சமீபத்தில் எனக்கு தெரிந்த வட்டாரத்திலே, குறிப்பாக பெண்களுக்கு அதிகமாக மிஸ்ட்கால் வருவதும் ராங் நம்பர் போன்கள் வருவதும் தொடர் கதையாகியுள்ளது.ஆண்கள் எவரேனும் எடுத்தால் தொடர்பு துண்டிக்கப்படுவதும், பெண்கள் எடுத்தால் பேச்சு கொடுப்பதுமான வலைவிரிப்புகள் நடந்து வருவது நிதர்சனம்,இதில் குறிப்பாக திருமணம் ஆகி கணவன் வெளிநாடுகளில் இருக்க,ஊரில் இருக்கும் பெண்கள் மீது அதிக முயற்சிகள் நடக்கிறது.இதில் இவர்களது பேச்சுக்கு பெண்கள் பதில் தருவதே,இவர்களின் வெற்றிக்கும்,பெண்களின் தோல்விக்கும் வழிவகுக்கிறது.இராமநாதபுர மாவட்டத்தில் இப்படி ஒரு பெண்,கணவன் வெளிநாட்டில் இருக்க,இங்கு இதுபோல ஏற்பட்ட தொடர்பால்,கணவன் வந்தவுடன்,அவனது பணத்தையும் தன் நகைகளையும் தூக்கிக்கொண்டு ஓடிப்போன சம்பவம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.விஷயம் தெரிந்து போய் அழைத்ததற்கு அவர் வரமறுத்து,பின்னாலில் அவர் கைவிடப்பட்டு,யாருடைய ஆதரவும் இல்லாது நிர்கதியாகி,பின் விபச்சாரத்தில் வீழ்ந்தது,எத்தனை பேருக்கு தெரியும்??

இவையெல்லாவற்றையும் அப்பட்டமாக மூடி மறைக்க,முஸ்லிம்/கிருஸ்தவ ஆண்கள் ஹிந்து பெண்களை கவர்ந்து செல்வதாகவும்,அது லவ்ஜிஹாத், லவ்குருஸேட் என மதத்திற்கு தகுந்தாற் போல்  பட்டம் கட்டி,நாடு முழுவதிலும் விஷப்பிரச்சாரம் செய்து வருகிறார்கள் இந்த தீவிரவாதிகள்..இது எப்படி என்றால்,திருடியவனே,முந்திக்கொண்டு திருடன் திருடன் என கத்திவிட்டால்,மற்றவர்கள் அவனை விட்டுவிட்டு மற்றவனை தேட ஆரம்பித்து விடுவார்களல்லவா?அதைத்தான் இந்த கயவர்கள் நயமாக செய்து கொண்டு இருக்கிறார்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள காவல்துறையின் முதல்தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள காணாமல் போன முஸ்லிம் பெண்கள் குறித்த விபரம்,நண்பர் ஒருவர் எனக்கு மெயில் மூலம் அனுப்பியது.எங்கே போனார்கள் இவர்கள்?? நாளை இவர்களின் கதி என்ன?? புஸ்ராவின் கதிதானா?? இதில் எத்துனை பேரின் விஷயம் வெளியில் தெரியும்?இன்னும் பதிவு செய்யப்படாத வழக்குகள் எத்துனை??ஓடிப்போன விஷயம் தெரிந்து வழக்கு பதியாது கூனிகுறுகி மறைந்து வாழும் குடும்பங்கள் எத்தனை??

 








இது நம்ம தமிழகத்தில் நாகையில் நடந்த கதை!இந்தப் பெண் ஹிந்துவாக மாற்றபட்டு திருமணம் செய்யப்பட்டு இருக்கிறார்.



இது இன்னொன்று.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஜூலை (13) - 2011 கெஜட்டை (Part VI - Section4) அண்மையில் பார்க்க நேர்ந்தது. இதில் பெயர் மாற்றங்கள் மட்டுமன்றிமதமாற்றங்கள் பற்றிய அறிவிப்பும் காணப்படுகிறது.அதில் குறிப்பாக முஸ்லிம் பெண்களின் மதமாற்றம்,அதுவும் இளவயதுடைய கல்லூரிப் பெண்களின் பெயர்கள் அதிகமாக இருக்கிறது.அதில் அவர்களது கணவர் பெயர் ஹிந்துவாக இருப்பதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம், இவர்கள் காதல்வலையில் சிக்க வைக்கப்பட்டவர்கள் என்று.

முஸ்லிம் பெண்களே! எச்சரிக்கையாக இருங்கள். முழுமையாக இஸ்லாத்தை கடைப்பிடிப்பதின் மூலம் அல்லாஹ்வின் கயிற்றை வழுவாக பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்,வழிதவறமாட்டீர்கள்..இதை நான் சொல்லவில்லை,அல்லாஹ் சொல்கிறான்.

பெண்களே நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால் அன்னியருடன் நடத்தும் பேச்சில் நளினம் காட்டாதீர்கள்..ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் இருக்கிறதோ அவன் ஆசை கொள்வான் - அல்குர்ஆன் 33:32

முஃமீனான பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக்கொள்ளட்டும் தங்கள் வெட்க தலங்களை பேணிக்காத்துக் கொள்ளட்டும். அல்குர் ஆன் 24:31
அல்குர் ஆன் 24:30 - ஆண்களுக்கு!!!

பெண்களே விழிப்புடன் இருங்கள்!! -உங்களை பலிகொடுக்க ஒரு கூட்டமே வேலை செய்கிறது...எச்சரிக்கை!!! 

இவ்வளவும் படிச்சுட்டு என்னடா நீங்க மட்டும் ஒழுங்கா?? நீங்களும் மதமாற்றம் செய்தானே செய்றீங்கன்னு கேக்குறவங்க,தயவு செய்து இந்த கட்டுரையை படிக்கத் தவற வேண்டாம்..

அன்புடன்
ரஜின்

1 கருத்து: