செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

நிலவு - ஓர் உரைநடைக் கவிதை



ஆம்! நிலவு...

நமை சூழ்ந்த எழில் எத்துனையாயினும்,
நிலவு ரம்யமான படைப்புதான்.

இரவை அலங்கரிப்பது,...
சாமகால காட்சியில் கதாநாயகனாய் உலாவருவது.

உலகின் நிகழ்வுகளை 
ஓசையின்றி நோட்டமிடும் ஒற்றை கண்'ணது,
கண்கள் உறங்கும் நேரம் விழிக்கிறது,
கண்விழிக்கும் போது மறைகிறது...

எதைச் சொல்ல இரவில் காய்ந்து,
பின் சொல்லாமலேயே பகலில் ஓய்கிறது???

குளுமையை மட்டுமே தன்மையாகக் கொண்டது.
பார்க்கும் விழிகளுக்கும்,விழிவழி மனதிற்கும்
குளுமையை தாராளமாய் தருவது.

ஈரேழு நாட்களிலே தேய்தலும்,..வளர்தலுமாய்
வாழ்க்கை தத்துவத்தை வடிவாய் உரைப்பது.

தத்துவமா??
ஆம்.வாழ்வெனில் அதில் மகிழ்வு,உயர்வென்ற வளர்ச்சிகளும்,
தோல்வி,துன்பமென்ற தேய்வுகளும் இருக்குமென....

மழலைகள் சோறுங்க
பல கதைகள் உனைத்தொட்டு,

மழலைமாறி நான் வளர,
இருளில் துணையாக வீடுவரை என்னுடன்,
முற்றத்திலும் நீ...கொல்லையிலும் நீ
திண்ணையிலும் நீ,ஓட்டின் இடுக்கிலும் நீயென,
என்னுடன் ஓடி,ஒழிந்து விளையாடி...

பதின்மத்தை நான் எட்டும் போது,
பலகனவுகள் கண்முன்னே
கனவுகளை கதைப்பதும் உன்முன்னே..

விழுதாய் நான் விழ வேராய்த் தாங்கிய,
என முன்னோர் கண்டதும் அதே நிலவு.
அன்னார் முகங்களை தன் ஒளியால் பதிந்ததும் அதே நிலவு,
இன்று என் முகத்தையும் பதிவாக்கிக் கொள்கிறது.
நாளைநான் முன்னோராகிப்போக..
என்வழியின் முகமும் பதிவாகும்.

நிலவு பழமையை உணர ஒப்பற்ற ஊடகமாய் நம் முன்.
காலம் மாற காட்சிகளும் மாறிடும்....
ஆனால்,அனைவரும் கண்ட காட்சி...மாறாக் காட்சியது நிலவு மட்டுமே..
காலச்சுவடாக ஏட்டில் கண்ட மனிதன் யாவரும் நிலவுக்கு பரிச்சியம்.
அவன் கண்ட,அவன் களித்த அதே நிலவு இன்று நம்முன்...

பல்வேறு காலங்கள்,பல்வேறு ரசனைகள்
பன்னாட்டு மக்கள்,பலகோடி சிந்தனைகள்
பலவித பருவம்,பன்நூறு எண்ணங்கள்,
என அத்துனைக்கும் பன்பரிமாணமாய்
நீ காட்டும் ஒற்றை முகம்...

தனக்குள் எத்துனை செய்திகளை கட்டிவைத்தும்!!!...
பார்வைக்கோ எளிய கோ(ல)ளமாய்....(Pause)

விழி விரியும் பிரம்மிப்பு அடங்கவே இல்லை...
நிலவைப் பார்த்து அல்ல....
நிலவைப் படைத்தவனைப் பார்த்து...

ஆம்...
பிரம்மாண்டங்களை ஆக்கிவிட்ட
ஏகனின் பிரம்மாண்டமான எளிய படைப்பு...

மனிதன் எத்தனை முயன்றாலும் இயலாததைப் படைத்து,
அதில் சிந்திக்க ஏகத்துக்கும் பொதித்து
அவனிருப்பை சாட்சி சொல்லும் அத்தாட்சியாக,,,

நிதமும் சுற்றுகிறது நிலவு....

நிலா ரசிகன்
ரஜின்

6 கருத்துகள்:

  1. ஒற்றை நிலவை வைத்து என்னவெல்லாம் செய்கிறான் இறைவன்.
    அவன்தானே அனைத்துலக்கத்தின் தலைவன்

    அருமை ராஜின்.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. மாஷா அல்லாஹ்,

    நண்பனே நீ எழுதியது கவிதை என்று உன்னை கவிஞன் என்று நினைத்து நீ ஏதும் பொய் கூரியுள்ளாயா என்று தேடினேன் உன் வரிகளில்.
    கிடைத்த பதில் மாஷா அல்லாஹ் நீ ஒரு அழைப்பாளன் என்று.இன்ஷா அல்லாஹ் தொடரட்டும் உன் பயணம் புதிய பாதையில்.

    நட்ப்புடன்
    அபூ ஸஃபிய்யா

    பதிலளிநீக்கு
  3. ஸலாம் சகோ மலிக்கா,தங்களின் வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றிகள்..
    அல்லாஹ் மிகப்பெரியவன்

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  4. சகோ லக்‌ஷ்மி,அவர்களே,
    தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  5. ஸலாம் சகோ அபூ ஸ்ஃபிய்யா.
    இஸ்லாத்தில் கவிதையில் பொய்,கற்பனை,இன்ன பிற இல்லாத கவிதை அனுமதிக்கப்பட்டதே..நபி(ஸல்) அவர்கள் நல்ல கவிதைகளை வரவேற்றுள்ளார்கள்..

    கவிதை எழுதும்போது,..பொய் கற்பனை வந்துவிடாதிருக்க அதிகம் கவனம் கொள்கிறேன்..

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு