ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

உன் இரகசியம்! உன் சிந்தனைக்கு!

ஆம் இது உன்னை பற்றிய இரகசியம் தான் நீ சிந்திக்காதவரை அது உனக்கு தெரிவதில்லை.
மனிதனாக நாம் மண்ணில் பிறந்ததில் இருந்து இந்த நொடி வரை நல்லது கெட்டது இருப்பினும்,வாழ்க்கை இயல்பாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.மனிதன் பிறப்பது,வாழ்வதும் இறப்பதுமான வாழ்க்கை சக்கரம் நம் கண்முன்னே சுழன்று கொண்டேதான் இருக்கிறது.வாழ்க்கை போகும் வேகத்தில் "SURVIVAL OF THE FITTEST" என பொதுவாக விலங்குகளுக்கு சொல்லப்படும் வாசகம் மனிதனுக்கு கச்சிதமாக பொருந்தித்தான் போய் விட்டது.வாழ்க்கை போராட்டத்தில் ஜெயிக்க,அல்லது குறைந்தபட்சம் தோல்வியடையாமலாவது இருக்க நாம் அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கிறது.
இத்தகைய சூழலில்,நம் கண்முன்னே சுழன்று,நமை எங்கிருந்தோ,எங்கோ கடத்திக் கொண்டிருக்கும் வாழ்க்கை சக்கரத்தின் இரகசியம் குறித்து,சில மணித்துளிகளாவது நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
என்ன இரகசியமா?..நாம் பிறந்து,வளர்ந்து வாழ்ந்து மடிவது என,அத்துனையும் நம் அறிவிற்குட்பட்டு நமக்கு தெளிவாகிவிட,என்ன இரகசியம் இருக்கிறது அதுவும்,என்னை பற்றி,நான் அறியாதது எனறால்???
உண்டு...
ஒரு சிறிய கேள்வியானது அந்த இரகசியம் குறித்த சிந்திக்கவைக்குமென நினைக்கிறேன்.அது..
மனிதக் குழந்தையாக பூமியைத்தொடும் வரை நாம்,தாயின் கருவறையில் இருந்தோம்....தாயின் கருவறையைத் தொடும்முன்... நாம் எங்கு இருந்தோம்..நமக்கான உயிர் எங்கு இருந்தது.எப்போது உடலுக்குள் வந்தது? எப்படி வந்தது? ஏன் வந்தது?
ம்ம்..இத்துனை விஷயங்களையும் சிந்தித்து முடிப்பதற்க்குள்ளாகவே,நம்மில் பலர் முடிவுக்கு வந்திருப்போம்..ஹ்ம் இதெல்லாம் கடவுளின் செயல்.இது தெரியாதா?என.... சரிதான்...
உங்களை படைத்தது யார் என்று யாரிடம் கேட்டாலும் அவர் இந்துவாக இருந்தாலும்,முஸ்லிமாக இருந்தாலும்,கிறிஸ்தவனாக இருந்தாலும், அவரின் பதில் என்ன? கடவுள் என்பார்.
கடவுள் என்பவன் யார்?
        அவரே நம்மை படைத்தவர்,பூமியை,வானத்தை,மலைகளை படைத்தவர்.மேலும் மழைகளை இறக்கி அதன் மூலம் தாவரங்களை வளரச்செய்தவர். நாம் காணும் அனைத்தையும் படைத்தவர் அவரே.இதில் யாருக்கேனும் சந்தேகம் இருக்குமா? கண்டிப்பாக இருக்காது அவர் கடவுளை நம்பக்கூடியவராக இருப்பின்... கடவுளை நம்பாதவருக்கு? எந்த ஒரு ஆதாரமும் இல்லை கடவுள் இல்லை என்று அவர் நிரூபிக்க.சிந்திக்க கூடிய ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்வார் கடவுள் உண்டு என்று.
சிலர் சொல்வார்கள் பெற்றோர்களே கடவுளை போன்றவர்கள் என்று.
என்ன? உடல் வளர்ச்சியில் இருந்து உயிர் கொடுப்பது வரை எல்லாம் தாய் செய்துவிட்டாளா???
ஹ்ம் இல்லை..இல்லவே இல்லை...கணவனின் உயிர்த்துளியை தன்னுள் வாங்கியது முதல்,தன் வயிற்றில் வளரும் தன் சேய்யை,போற்றி பாதுகாக்கும் உன்னதமான வேலையை செய்தாள்.வயிற்றில் நிகழும்,கரு உருவாக்கத்திற்கு,புறக்காரணியாக அவள் இருக்கிறாளே தவிர அகக்காராணிகளாக அவள் இருப்பதும் இல்லை,அதை அவள் அறிவதும் இல்லை.அதுமட்டுமல்லாது.
தாய் தந்தையரை நாம் பெற்றோர் என்கிறோம்
எதைப்பெற்றோர்?
பிள்ளைகளை
யாரிடம் இருந்து????...யாராவது ஒருவர் கொடுக்காமல்,இன்னொருவர் பெறமுடியாதல்லவா?.இதன் மூலம் நாமே ஒப்புக்கொண்டோம் அவர்கள் நம்மை படைக்கவில்லை,நம்மை பெற்றவர்கள் என்று. 

 மனிதக்கரு வளர்ச்சி குறித்த அறிவியல் கூற்றை சற்றே சிந்திப்போம்..
ஆணுடைய இந்திரியத்துளி பெண்ணிடம்  தயாராக உள்ள முட்டையுடன் கலந்து  (zygote) என்ற கரு உருவாகுகின்றது. பின் அது பிரிந்து (Blastocyst) என்ற நுண்ணுயிராக மாறி கருப்பையில் விதைக்கப்படுகிறது.இந்த கலப்பான விந்துத் துளியாகிய கருப்பையில் நுழைந்த மனிதக்கரு அட்டைப்பூச்சி தோலின் மீது கடித்துக் கொண்டு தொங்குவதைப் போல் கருப்பையின் உட்சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும். 7ல் இருந்து 24 நாட்கள் வரை வளர்ச்சி நிலையில் இருக்கும் மனிதக் கருவைக் குறிக்க இதைவிடச் சிறந்த வார்த்தை இருக்க முடியாது. அட்டைப்பூச்சி தனக்கு வேண்டிய சத்தை ஒட்டிக் கொண்டிருக்கும் பிராணியிலிருந்து எவ்வாறு உறிஞ்சிக் கொள்கிறதோ அவ்வாறே மனிதக் கருவும் தனக்கு, வேண்டிய சத்தை கர்ப்பப்பையில் ஒட்டிக் கொண்டு அங்கிருந்து உறிஞ்சிக் கொள்கிறது.
கரு உண்டாண நான்காவது மாத இறுதியில் கரு ஏறத்தாழ மெல்லப்பட்ட சதைத்துண்டைப் போல் தோற்றமளிக்கின்றது. தலைப் பகுதி, மார்பு,வயிறு, கால்கள் இவை எல்லாம் பிரிக்கப்பட்டு வளர்வதற்கு முன்னால் இவற்றின் சுவடு கருவில் உருவாக ஆரம்பிக்கும். அந்த சுவடுகள் தான் பல்லால் சதைத் துண்டை மென்றால் ஏற்படும் பற்குறிகளைப் போன்ற தோற்றத்தை அந்தக் கருவிற்கு ஏற்படுத்தி விடுகின்றது. கருவளர்ச்சியில் மூன்று அடுக்குகளாக உருப்புக்கள் உருவாகின்றன.  (Ectoderm) என்ற மேல் அடுக்கிலிருந்து தோல் பகுதிகளும், நரம்பு மண்டலமும் மற்றும் தனிப்பட்ட உனர்வுகளை அறியக்கூடிய இன்ன பிற உறுப்புகளும், சுரப்பிகளும் உருவாகின்றன.
(Endo derm) என்ற கீழ் அடுக்கில் இருந்து உட்புற செல், திசு அடுக்கு உண்டாகிறது. (Mesoderm) என்னும் மத்திய அடுக்கிலிருந்து தான் மென்மையான எலும்பு முதலில் உருவாக்கப்பட்டு அதன் மீது சதை போர்த்தப்படுகின்றது. எட்டாவது வாரத்தை பல்வேறு வளர்ச்சி மாற்றங்களையும், நிலைகளையும் கடந்து கரு, மற்ற பிராணிகளைப் போன்றிருக்கிறது. எட்டாவது வாரத்தை ஒட்டித்தான் அந்தக்கரு மனிதப்  பண்புகளை அடைகின்றது.
கி.பி.16ம் நூற்றாண்டுக்குப்பிறகு Microscope கருவியை Leewenhook என்பவரால் கண்டு பிடிக்கப்பட்ட பிறகுதான் கோழிக் கருவின் ஆரம்ப நிலைகள் பற்றிய விளக்கங்கள் கிடைக்க ஆரம்பித்தன . அப்போது கூட மனிதக் கரு வளர்ச்சி பற்றி எவரும் விளக்கிடவில்லை!
ஏழாம் நூற்றாண்டில் மக்கள் பெற்றிருந்த மருத்துவ அறிவைக்கொண்டு மேற்குறிப்பிட்டுள்ள மனித வளர்ச்சி பற்றி கண்டிப்பாக அறிய முடியாது. ஆனால் ஏழாம் நூற்றாண்டிலேயே மனிதக்கருவின் வளர்ச்சி பற்றி திரு குர்ஆன் கூறுவதை பாருங்கள்  
பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனைப் பாதுகாப்பான ஒரு இடத்தில் வைத்தோம்! பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:13,14)
கலப்பான இந்திரியத்துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைதோம். (அல்குர்ஆன் 76:2)
உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ்! உங்களுடைய இறைவன்! அவனுக்கே ஆட்சி அதிகாரம் (முழுதும் உரித்தாகும்) அவனைத் தவிர வேறு நாயன் இல்லை! அவ்வாறிருக்க (அவனை விட்டும்) நீங்கள் எப்படித் திருப்பப்படுவீர்கள்? (அல்குர்ஆன் 39: 6)
மனிதன் (கேள்வி கணக்கின்றி) வெறுமனே விட்டுவிடப்படுவான் என்று எண்ணிக்கொண்டானா?
(கர்ப்பக்கோளாறைக்குள்) சொட்டு சொட்டாக ஊற்றப்படும் விந்தின் ஒரு துளியாக அவன் இருக்கவில்லையா?
பிறகு அவன் (அட்டைப்பூச்சி போன்று ஒட்டிக்கொண்டிருக்கும்) இரத்தக்கட்டியாக இருந்தான்.பிறகு (அவனை) அவன் படைத்து, பிறகு செவ்வையாக அவன் அமைத்தான் பிறகு அதிலிருந்து ஆன்,பெண் என்னும் இரு ஜோடிகளை உண்டாக்கினான். இத்தகைய (ஆற்றலுள்ள)வன், இறந்து விட்டவர்களை உயிர்பிப்பதின் மீது சக்தி உடையவனல்லவா? (அல் குர்ஆன்-75:36-40)    
               என் அன்பு சஹோதரர்களே சிந்தியுங்கள்.அதிநவீன மருத்துவக்கருவிகளின் பொருட்டு,மேற்கண்ட வசனங்களை அறிவியல் இன்று மெய்ப்படுத்தியுள்ளது.எவ்வித மருத்துவ அறிவியலும் வளர்ந்திடாத காலத்தில் எழுத,படிக்க தெரியாத ஒரு சாதாரண மனிதனால் இது எப்படி சொல்லப்பட்டிருக்கும்?...
இத்துனை அசாதரணமான அறிவியல் கூற்று,யாவரையும் மிகைத்தோனாகிய,மேலான அறிவுடையோனாகிய வல்ல அல்லாஹ்வால் மட்டுமே இத்துனை பட்டவர்த்தனமாகக் கூறமுடியும்.இவ்வசனங்களை இறக்கி அருளிய அல்லாஹ்வே நம் யாவரையும் படைத்தவன் என்பதும்,இவ்வசனங்களை பெற்றுத்தந்த முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதையும்,இது(இந்த குர்ஆன்)   உங்களையும் என்னையும் படைத்தவனின் அருட்கொடை என்பதையும் நடுநிலையோடு சிந்திக்கும் ஓவ்வொருவரும் ஏற்றுக்கொள்வார்கள். இதன் மூலம் நம் அனைவரையும் படைத்தவன் ஒருவனே அவனே அல்லாஹ் என்பதற்கு,நம் பிறப்பின் இரகசியமே அழியாச்சான்றாக இருக்கிறது.

சத்தியமாக நம்மை படைத்தவன் அல்லாஹ் ஒருவனே. 

ஆக்கம்: அபூ ஸஃபிய்யா & ரஜின்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக