வியாழன், 23 டிசம்பர், 2010

அஜ்மீர் குண்டுவெடிப்பு:அஸிமானந்தாவை ஆஜர்படுத்த வாரண்ட்

அஜ்மீர்,டிச.23:அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுவாமி அஸிமானந்தாவை ஆஜர்படுத்த நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
ஏ.டி.எஸ் கூடுதல் சூப்பிரண்ட் சத்தியேந்திரசிங் ராணவத்தின் மனுவில் ஆஜர்படுத்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அஜ்மீர்
குண்டுவெடிப்பிலும் அஸிமானந்தாவுக்கு பங்குள்ளது என ராணவத்
நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

59 வயதான ஹிந்துத்துவா பயங்கரவாதி அஸிமானந்தாவை ஜனவரி 4-ஆம் தேதி ஏ.டி.எஸ் நீதிமன்றம் முன்பாக ஆஜர்படுத்துவார்கள். மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கடந்த நவம்பர் 19-ஆம் தேதி ஹரித்துவாரில் சி.பி.ஐயால் கைதுச் செய்யப்பட்ட இவர் தற்பொழுது ஹைதரபாத் சிறையில் உள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ், பாலைவனத்தூது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக