வியாழன், 30 டிசம்பர், 2010

மக்கள் நலப்பணியாளராக வாய்ப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு

இராமநாதபுரம்: மக்கள் நலப்பணியாளர் காலி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக, மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் செம்பொன்குடி ஊராட்சியில் மக்கள் நலப்பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது.இதற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பம் செய்யலாம்.விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சியை சேர்ந்தவராகவும் அங்கு வசிப்பவராகவும் இருத்தல் வேண்டும். 18 முதல் 30 வயதுக்குட்பட்ட,10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வரும் ஜனவரி 6ம் தேதி மாலை 5.45 மணிக்குள் முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலக திட்டப்பிரிவில் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும், என தெரிவித்துள்ளார்.

நன்றி: தினகரன்-27.12.2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக