புதன், 16 மார்ச், 2011

கேரள மாநில சட்டமன்றத் தேர்தல்: எஸ்.டி.பி.ஐ 98 தொகுதிகளில் போட்டி

imagesCAVIMY01
கோழிக்கோடு:வருகிற ஏப்ரல்-13-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கேரள மாநில சட்டமன்றத் தேர்தலில் சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி 98 இடங்களில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
முதல் கட்டமாக 42 தொகுதிகளில் அக்கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மஞ்சேஷ்வரம், நேமம் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்படமாட்டார்கள். அங்கு பா.ஜ.கவை தோற்கடிப்பதற்கான கொள்கை வகுக்கப்படும்.
40 தொகுதிகளில் கேரள தலித் சிறுத்தைகள், லோக் ஜனசக்தி கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்களை எஸ்.டி.பி.ஐ ஆதரிக்கும். இத்தகவலை கேரள மாநில எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

நன்றி:  www.thoodhuonline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக