வெள்ளி, 11 மார்ச், 2011

தமிழகத்தில் மருத்துவ நுழைவுத்தேர்வு கிடையாது

சென்னை, மார்ச். 10-
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர நுழைவுத் தேர்வு இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் நுழைவுத் தேர்வு ரத்து தொடர்பான அறிவிக்கையை தெரிவிக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நுழைவுத்தேர்வு நடத்தப்பட மாட்டாது என்று மாநில அமைச்சர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டதாகவும், இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிக்கைக்கு ஒப்புதல் இல்லை என நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளது. இதனால் தற்பேதைய நிலையிலேயே மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நடக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நன்றி : கூடல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக