செவ்வாய், 31 மே, 2011

கமலாதாஸ் – ஸுரையா


கேரள பத்திரிக்கை துறையில் முத்திரை பதித்திருக்கும் பெண் எழுத்தாளர் டாக்டர் கமலாதாஸ் கடந்த 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாள் அன்று தாம் இஸ்லாத்தில் இணைந்து விட்டதாக உலகுக்கு அறிவித்தார். அத்தோடு தமக்கு ஸுரையா என்று புதிய பெயரைச் சூட்டிக் கொண்டதாகவும் பிரகடனப்படுத்தினார் அவர்.
கேரளாவில் எர்ணாகுலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு மாநாட்டைத் துவக்கி வைத்த போது அவர் திடீரென அந்த அறிவிப்பை வெளியிட்டார். அவரது உரைநடை மற்றும் கவிதை நடைக்கு மக்களிடத்தில் சிறந்த வரவேற்பிருந்ததால் அவரது இந்த திடீர் அறிவிப்பு மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திற்று.

கல்கி


ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.
இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.

சனி, 28 மே, 2011

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக சோ.அய்யர் நியமனம்

தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் அவரை நியமித்துள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

சையத் முனீர் ஹோடா பதவி விலகியதையடுத்து அய்யருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான இவர் மதுரை, கரூர் மாவட்டக் கலெக்டராகவும் கடந்த அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் தலைவராகவும் இருந்தவர் சோ. அய்யர். டாஸ்மாக் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் அரசுக்கு கிடைக்கும் தாரக மந்திரத்தைக் கண்டுபிடித்துத் தந்த பெருமையும் இவரையே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூடி மறைப்பேன் என்னை!



குறையேதுமில்லை
திரையிட்டு வந்தேன்;
உன் இச்சைக்கொண்ட
பார்வைக்கு எச்சில் துப்பி
எதிர்ப்பேன்!

அரைநிர்வாணம்
அழகாய் தோன்றும் உனக்கு;
உன் அக்காள் தங்கை
காட்டி வந்தாள் முழுக்கோபம் எதற்கு!

வியாழன், 19 மே, 2011

மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்

கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்துவப் பிரச்சார பீரங்கி டாக்டர் மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார்.
இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார். அவரது எண்ணமெல்லாம், குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டுடும். முஸ்லிம்களைக் கிறித்துவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் நமக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்து விடப் போகிறது? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக இருந்தது.

புதன், 18 மே, 2011

மனைவியை மகிழ்விப்பது எப்படி?

(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வொரு ஆணும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்)

அழகிய வரவேற்பு

- வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.

- மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும் கூட. - அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி 'முஸாபஹா" செய்யலாம்.

- வெளியில் சந்தித்த நல்ல செய்திகiளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காக தள்ளி வையுங்கள்.

இன்று முதல் ஜூன் 3 வரை பி.எட். விண்ணப்ப வினியோகம்

மதுரை: இந்த கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று (18-ம் தேதி) முதல் வழங்கப்படுகிறது.

இது குறித்து ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

2011-12ம் கல்வி ஆண்டில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் உதவி பெறாத தனியார், சிறுபான்மை மற்றும் சிறுபான்மையல்லாதார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், உருது, மலையாளம் மற்றும் தெலுங்கு வாயிலாக ஆசிரியர் கல்வி பட்டய படிப்பில், ஒற்றை சாளர முறை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இந்த இயக்ககத்தால் வரவேற்கப்படுகின்றன.

திங்கள், 16 மே, 2011

நாளை பதவியேற்க இருக்கும் புதிய அமைச்சர்கள் பட்டியல்

    தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில், 160 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க. 146 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. அ.தி.மு.க. கூட்டணி மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 203 தொகுதிகளை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் புதிய முதல்-அமைச்சராக ஜெயலலிதா நாளை (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார்.

ஞாயிறு, 15 மே, 2011

முஸ்லிம்களுக்கு களங்கம் ஏற்படுத்த ஆர்எஸ்எஸ்தான் குண்டு வைத்தது: திக்விஜய்!

முஸ்லிம்களுக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் நாடு முழுவதும் குண்டுகளை வெடிக்கச் செய்தது என்று காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திக் விஜய் சிங், உத்திரப் பிரதேச மாநிலம் மெயின்பூரி என்ற இடத்தில் நடைபெற்ற பேரணி ஒன்றில் கலந்து கொண்டு திக் விஜய் சிங் பேசினார்.

சனி, 14 மே, 2011

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்

உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,

ஹேய்.. அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார்.

பின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே.., எடுக்காதேன்னு சொல்றேன்ல..,

வியாழன், 12 மே, 2011

குடும்ப உறவு

இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!

இஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுடன் சம்பந்தப்பட்ட இபாதத்துக்களில் குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும். சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். இவ் வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை ஏற்படுத்த வேண்டும்.

ஞாயிறு, 8 மே, 2011

CURRENT OPENINGS IN KUWAIT - M/s Kharafi National Co.



Job Vacancy
Expired By
Contact HRD
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
Senior Estimation Engineer ( MEP / Oil & Gas Experience)
31-May-2011
Senior Planning Engineer (Power / Substation)
31-May-2011
31-May-2011
31-May-2011
Senior Quality Control Engineer-Mechanical (Construction Oil & Gas Upstream)
Candidate should have experience in Oil & Gas construction, familiar in preparing Inspection Test Plan, Technical Procedures, and Method statement. Knowledge in codes and standards. 
To manage all QA/QC function in the work place and manage a team of QC engineers and Welding Inspectors for day to day QA/QC Functions.
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
31-May-2011
Supervisor Electrical
Specialized in Cranes & Heavy Equipments
31-May-2011

சனி, 7 மே, 2011

இஸ்லாத்தின் தனித்துவம் ! மற்ற மதங்களுடன் ஒப்பீடு

உலகில் உள்ள எல்லா மதங்களும் – நல்லதையே செய்ய வேண்டும் – நல்லதையே பின்பற்ற வேண்டும் என்று சொல்லும் போது – ஒரு மனிதன் இஸ்லாமிய மதத்தை மாத்திரம் ஏன் பின்பற்ற வேண்டும்.? மற்ற மதங்களில் எதையேனும் ஒன்றை பின்பற்ற முடியுமே!
பதில்:
1. இஸ்லாமிய மார்க்கத்திற்கும் – பிற மதங்களுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம்:
எல்லா மதங்களும் நல்லதையேச் செய்ய வேண்டும் – நல்லதையேப் பின் பற்ற வேண்டும் என்று சொல்கின்றன. ஆனால் இஸ்லாமிய மார்க்கம் நல்லதையேச் செய்ய வேண்டும் – நல்லதையேப் பின்பற்ற வேண்டும் என்று சொல்வதோடு நின்று விடாமல் – தனிமனிதனிடமும் – முழு மனித சமுதாயத்திடமும் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கக் கூடிய செயல்களை நடைமுறைப்படுத்துகிறது. இஸ்லாம். நன்மையை ஏவி – தீமையைத் தடுக்கக் கூடிய செயலை செய்யும் போது மனித சமுதாயத்தில் இருக்கும் மனிதத் தன்மையையும், சமுதாயத்தில் மனிதர்களுக்கிடையே இருக்கும் நடைமுறைச் சிக்கலையும் கணக்கில் கொள்கிறது. மனிதர்களை படைத்த இறைவனால் வழிகாட்டப்பட்ட மார்க்கம் இஸ்லாம். எனவேதான் இஸ்லாம் – தீனுல் ஃபித்ர் – அதாவது இயற்கையான மார்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஸ்கூல் சலோ / பள்ளி செல்வோம்


புது டில்லி மே 01 :தொடக்கக் கல்வி முதல் உயர்நிலைக் கல்வி வரை ஆண் மற்றும் பெண் குழந்தைகள் அனைவரும் கல்வி கற்க பள்ளிக்கூடம் செல்வதை உறுதிசெய்துகொள்ள பாப்புலர் ஃப்ரண்ட்டின் "ஸ்கூல் சலோ" அல்லது "பள்ளிக்கூடம் செல்வோம்" பிரசாரம் இன்று முதல் தொடங்கியுள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் பல மாநிலங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ள இடத்தில் அதன் உள்ளூர் கிளைகள் களப்பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - கன்னியாஸ்திரி இரெனா ஹன்டோனோ



நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? என்று  ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono அவர்கள் கூறுகின்றார்கள்
நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றி பயில்வதற்காக அனுப்பப்பட்டேன். என்னுடைய படிப்பிற்கான முழு செலவுகளையும் அந்த தேவாலய நிர்வாகவே பொறுப்பு ஏற்றுக் கொணடிருந்தது. ஏனென்றால் என்னுடைய பெற்றோர்கள் இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றின் அமைப்பாளர்கள் (Organisors) ஆவார்கள்.

குர்ஆனின் பல பிரதிகள் உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில்; உஸ்மான் (ரலி) அவர்களால் எரிக்கப்பட்டது. குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதல்ல. மாறாக உஸ்மான் (ரலி) அவர்களால் தொகுப்பட்ட பிரதிதானே தற்போதுள்ள குர்ஆன்?

பதில்:
இஸ்லாத்தின் மூன்றாவது கலிபா உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் ஒன்றுக் கொன்று முரண்பட்ட பல குர்ஆனின் பிரதிகளை தொகுத்து ஒரே குர்ஆனாக உருவாக்கப் பட்டதுதான் இன்றைய அருள்மறை என்பது, குர்ஆனை பற்றி உலவுகின்ற கட்டுக்கதைகளில் ஒன்று.
எந்த அருள்மறை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டதோ அதே அருள்மறைதான், இஸ்லாமிய உலகத்தினரால் பெரிதும் போற்றி மதிக்கப்படும் அல்லாஹ்வின் வேதமாக இன்றும் இவ்வுலகில் திகழ்கின்றது. இன்றைக்கு இருக்கும் அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட ஒன்று. கட்டுக்கதைக்கான ஆணிவேர் எது என்று நாம் இப்போது ஆய்வு செய்வோம்.

ஞாயிறு, 1 மே, 2011

கடவுள்!..ஹிந்துக்களின் புரிதல்....



கடவுள்!....சரி,அதென்ன அடுத்து "ஹிந்துக்களின் புரிதல்"?...தலைப்பை பார்க்கும் போதே...ஆஹா ஆரம்பிச்சுட்டான்னுங்கடா...ஹிந்து மதத்தையும், ஹிந்து கடவுள்களையும் இனி திட்டி தீக்க போரானுகன்னுதா பொதுவா எல்லாத்துக்கும் தோனும்...ஏன்னா?ஹிந்துமதத்தப் பத்தி முஸ்லீமும், இஸ்லாத்தை பத்தி ஹிந்துவும் எழுதுனா,அது எதிர்மறை கருத்துப் பதிவாகத்தான் இருக்கும் என்பது பொதுவான புரிதல்,அது ஒருவகையில் உண்மையும் கூட...எதிர்மறைக் கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் அவை விரச விமர்சனங்களாக இல்லாமல், நாகரீகமாக, இருப்பது அவசியம்.

சவூதி: பொதுமன்னிப்பு காலம் மேலும் நீட்டிப்பு


உம்ரா, ஹஜ்ஜு, மற்றும் சுற்றுலா / தற்காலிக விசாக்களில் வந்து அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிகக் காலம் சட்டவிரோதமாக தங்கிவிட்ட வெளிநாட்டவர்களை வெளியேற்ற கடந்த செப்டம்பர் 25 முதல் ஆறுமாதகாலத்திற்கு சவூதி அரசாங்கம் பொது மன்னிப்பு அறிவித்திருந்தது. இவ்வருடம் (2011) மார்ச் 23 ஆம் தேதியுடன் முடிவடைந்த இப்பொதுமன்னிப்புக் காலம் தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டு இவ்வருடம் செப்டம்பர் 14 வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று ரியாத்திலுள்ள சவூதி உள்துறை அமைச்சக அறிவிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கைவெட்டு வழக்கில் என்.ஐ.ஏவின் தகவல்

கைவெட்டு வழக்கில் தலைமறைவானவர்கள் பற்றிய அறிக்கையை வெளியிட கொச்சி நீதிமன்றம் தேசிய விசாரணை கமிஷன் (NIA) விடம் ஆணையிட்டுள்ளது.
முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவு படுத்தி கேள்வித்தாள் தயாரித்த ஜோசப்


 இந்த வழக்கை விசாரித்து வந்த கொச்சி உயர்நீதிமன்றம் சமீபத்தில் இந்த வழக்கை தேசிய விசாரணை கமிஷன் (NIA) விடம் இவ்வழக்கின் விசாரணையை ஒப்படைத்தது. நீதிபதி எஸ். விஜய்குமார் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக இருப்பவர்கள் பற்றிய அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று என்.ஐ.ஏவிடம் கேட்டுக்கொண்டார்.

சமரசத்திற்கு தயார்:ஆனால் பதவி விலகமாட்டேன் – கத்தாஃபி

  kadafiதிரிபோலி:லிபியாவின் மீது மேற்கத்திய படையினர் கடுமையான தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கும் வேளையில் சமரசப்பேச்சுவார்த்தைக்கு தயார் என லிபிய அதிபர் முஅம்மர் கத்தாஃபி அறிவித்துள்ளார்.பல வாரங்களாக தொடரும் கத்தாஃபி எதிர்ப்பு போராட்டங்களுக்கும்,மேற்கத்திய படையினரின் தாக்குதல்களுக்கும் இடையே நேற்று காலை அரசு அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியில் தோன்றி பேட்டியளித்த முஅம்மர் கத்தாஃபி மேற்கத்திய படையினரை கடுமையாக விமர்சித்தார்.அவர் கூறியதாவது:நான் அதிகாரத்திலிருந்து விலகி  நாட்டை விட்டு செல்ல விரும்பவில்லை.லிபியா போர் நிறுத்தத்திற்கு தயாராக உள்ளது.ஆனால்,இது ஒரு பக்கத்திலிருந்து மட்டும் உருவாகக்கூடாது.

5-வது நாளாக விமானிகள் போராட்டம்:150 விமானங்கள் ரத்து

 M_Id_117168_air_india_strikeபுதுடெல்லி:விமானிகளின் போராட்டம் 5-வது நாளை எட்டிய நிலையில் ஏர் இந்தியா 150 விமான சேவைகளை நிறுத்தியுள்ளது.35 விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன.போராட்டம் இன்றும் தொடர்ந்தால் மேலும் பல விமான சேவைகள் ரத்துச்செய்யப்படும் என கருதப்படுகிறது.மும்பையில் 60 விமானங்கள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.
கொல்கத்தாவில் 14 விமானங்களும், கேரளாவில் 12 விமானங்களும் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.ஏர் இந்தியாவின் 225 உள்நாட்டு விமானசேவையில் 40 சேவைகள் மட்டுமே தற்போது நடைபெறுவதாக ஏர் இந்தியா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈராக்கில் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு இழப்பீடு, ஆனால் அமெரிக்காவின் படையெடுப்பால் பாதிக்கப்பட்ட ஈராக்கியர்களுக்கு???

  iraq_bigபாக்தாத்  : ஈராக்கின் பாராளமன்ற உறுப்பினர்கள் சதாம் ஹுசைனின் படையால் 1990 மற்றும் 1991 ற்கும் இடையில் நடந்த வளைகுடா போரில் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு இழப்பீடாக அமெரிக்க டாலர் 400 மில்லியன் வழங்க அனுமதி அளித்துள்ளது.இழப்பீடு வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் இன்று உடன்பாடு எட்டியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் வாஷிங்டன்னிற்கும் பாகத்திற்கும் இடையே கையெழுத்தான உடன்படிக்கையின்மீது சட்டம் ஏற்றும் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் 226 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் இழப்பீடு வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.

34,343 பள்ளிகள் ஆர்.எஸ்.எஸி​னால் இந்தியாவில் நடத்தப்படு​கிறது


Ekal_Vidyalaya_Logoஏகல் வித்யாலயா என்ற அமைப்பு ஏப்ரல் 2008 கணக்கெடுப்பின் படி 34343 பள்ளிக்கூடங்களை இந்தியா முழுவதும் நடத்திவருகின்றது. இது இந்து பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி. தொடர்புடையது.
ஏகல் வித்யாலயா என்பது இந்துச் சிறுவர் சிறுமியருக்கு இந்துமதக் கலாச்சார மரபுகளைக் கற்பிப்பதற்காக, குறிப்பாக பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் ஒரேயோர் ஆசிரியரைக் கொண்டு, குருகுல பாணியில் ஆர்எஸ்எஸ் நடத்தும் தொடக்கநிலை பள்ளிக்கூடங்களாகும்.