சனி, 28 மே, 2011

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக சோ.அய்யர் நியமனம்

தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் அவரை நியமித்துள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

சையத் முனீர் ஹோடா பதவி விலகியதையடுத்து அய்யருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான இவர் மதுரை, கரூர் மாவட்டக் கலெக்டராகவும் கடந்த அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் தலைவராகவும் இருந்தவர் சோ. அய்யர். டாஸ்மாக் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் அரசுக்கு கிடைக்கும் தாரக மந்திரத்தைக் கண்டுபிடித்துத் தந்த பெருமையும் இவரையே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.



கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான அதிகாரியாக இருந்த முனீர் ஹோடா பின்னர் ஒதுக்கி வைக்கப்பட்டார். அவருக்கு திமுக ஆட்சியில் முக்கிய பதவிகள் கிடைத்தன.

இப்போது ஆட்சி மாறிவிட்ட நிலையில், தேர்தல் ஆணையர் பதவியை அவர் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source . Thatstamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக