ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

நேர்மறை அரசியலை தேர்வு செய்வோம்! பாரம்பரிய கட்சிகளை புறக்கணிப்போம் - பாப்புலர் ஃப்ரண்ட்


கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல்களில் நேர்மையான ஊழலற்ற ஆட்சி அமையவும், அடிதட்டு ஏழை எளிய மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடையும் வகையிலும் ஒரு நல்ல அரசியல் மாற்றம் ஏற்பட மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இதியாவின் தேசிய செயற்குழு கேட்டுக்கொள்கிறது. மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் மேற்கு வங்காளத்தில் நிறுத்தியுள்ள வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு வழங்குவது என முடிவுசெய்துள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் தேசிய கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ், பாஜக, சிபிஐ (எம்) மற்றும் மாநில அளவிலான கட்சிகளான இந்தியா யூனியன் முஸ்லிம் லீக், கேரளா காங்கிரஸ், திமுக, அதிமுக, TMC, அஸ்ஸாம் கன பரிஷத் ஆகிய அனைத்து கட்சிகளுமே ஊழல், குடும்ப ஆட்சி, சமூக விரோத செயல்கள் மற்றும் அடாவடித்தனம் போன்ற விஷயங்களில் ஒத்த கொள்கையுடையவர்களாக உள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இவர்கள் பல ஆண்டுகாலமாக ஆட்சி புரிந்து வருகின்றனர். இந்த கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர்கள், அவர்களுடன் இருப்பவர்கள் மற்றும் கூட்டாளிகள் ஆகியோர் மட்டுமே கடந்த அறுபது ஆண்டுகால ஆட்சியில் பயன் அடைந்துள்ளனர். இக்கட்சிகளால் மக்கள் விரக்தி அடைந்திருந்தாலும் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்திக்கொண்டு வேறு வழியில்லாமல் ஒவ்வொரு தேர்தல்களிலும் ஆளுங்கட்சிக்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ மாற்றி மாற்றி வாக்களித்து வருகின்றனர் . எனவே மாறி மாறி இந்த பாரம்பரிய கட்சிகளே ஊழல்கள் பல செய்து மாநிலத்தை சுரண்டி ஆட்சி செய்து வருகிறது. மேற்கு வங்காளத்தில் மட்டும் சிபிஐ(எம்) ஏகபோகமாக ஊழல் ஆட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது. இத்தகைய பாரம்பரிய கட்சிகளால் மக்களுக்கு எவ்வித பிரயோஜனமும் இல்லாத சூழ்நிலையிலும் ஒவ்வொரு தேர்தல்களின் போதும் வேறு வழியில்லாமல் மாறி மாறி வாக்களிக்கும் இந்த எதிர்மறை அரசியலால் நாட்டை சுரண்டி பிழைக்கும் அரசியல் சாம்ராஜ்யம் தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது.
எனவே தான் நாட்டு மக்களை பசியில் இருந்தும் பயத்திலிருந்தும் விடுவிக்ககூடிய நேர்மறையான ஆக்கபூர்வமான மாற்று அரசியலை உருவாக்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா பாடுபட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக இந்த முயற்சியில் ஒரு சில முன்னேற்றம் அடந்துள்ளது. ஒரு சில மாநில கட்சிகள் மற்றும் தேசிய அளவில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா எழுச்சி பெற்று வருவது ஒடுக்கப்பட்ட மற்றும் வஞ்சிக்கப்பட்ட மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்துள்ளது. தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி இந்த பாரம்பரிய கட்சிகளுக்கு
எதிராக கணிசமான எண்ணிக்கையில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது. ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி கூட்டணிகளுக்கு வாக்களித்தே ஆக வேண்டும் என நிர்பந்தத்தால் தவித்த மக்களின் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு நல்ல மாற்றாகவும், மருந்தாகவும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
எனவே ஐந்து மாநிலங்களில் நடைபெறும் இந்த தேர்தல் பாரம்பரிய கட்சிகளின் ஊழல் கூட்டணிக்கு நல்ல பாடம் புகட்டுவதொடு, மக்களுக்கு நிவாரணமும் நிம்மதியையையும் கொடுக்கக் கூடிய தேர்தலாக அமையும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய செயற்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது என  பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின்  ஊடக தொடர்பாளர் தெரிவித்துள்ளார் .

இக்கூட்டத்திற்கு தேசிய தலைவர் இ.எம்.அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார் . தேசிய பொது செயலாளர் கே.எம்.ஷரிப், தேசிய துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா, செயலாளர் யாசிர் ஹசன் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் பி.கோயா, ஏ.எஸ்.இஸ்மாயில், யா முஹைதீன், முஹம்மது காலித் ரஷாதி, ஹாமித் முஹம்மது, ஒ. .எம். சலாம், முஹம்மது ரோஷன், மௌலானா கலிமுல்லா சித்தீகி ஆகியோர் உடனிருந்தனர்.

Thanks: http://www.popularfrontindia.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக